சந்திரயான்-3 லேண்டர்: புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!
Mar 15, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 லேண்டர்: புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்த இஸ்ரோ!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை செப்டம்பர் 6-ம் தேதி தரையிறக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், சந்திரயான்-2-ன் ஆர்பிட்டர் கடந்த 4 ஆண்டுகளாக நிலவை சுற்றி வந்துகொண்டுதான் இருக்கிறது. இது அவ்வப்போது புகைப்படங்களையும் எடுத்து அனுப்பி வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் ஆய்வு மேற்கொண்டு வந்தன. இந்த சூழலில், தற்போது நிலவில் சூரியன் மறைந்து இருள்சூழத் தொடங்கி இருக்கிறது. எனவே, லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை மீண்டும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த 6-ம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கருவி, சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.

More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso

— ISRO (@isro) September 9, 2023

 

Tags: Chandrayaan 3photoChandrayaan-2vikram lander
ShareTweetSendShare
Previous Post

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில் சாய்னா நேவால் தரிசனம்!

Next Post

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies