தமிழகத்தில் போதை வஸ்து, பயங்கரவாதம் - இந்து முன்னணி எச்சரிக்கை!
Oct 16, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் போதை வஸ்து, பயங்கரவாதம் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், போதைப் பொருட்களும் பயங்கரவாதமும் கைகோர்த்து, தமிழகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை தமிழக அரசும், தமிழக உளவுத்துறையும் எப்போது உணர்ந்திடும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதை பொருட்கள் சர்வசாதாரனமாக கிடைக்கும் நிலை இருக்கிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கூட மிக அதிகமாக போதை பொருட்கள் புழக்கம் என்பது எச்சரிக்கை நிலையை கடந்து அபாய நிலையில் இருக்கிறது என்பதற்கு உதாரணம்.

அதுவும் பள்ளிக மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் போதையில் ஆசிரியர்களை தாக்குவதும் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொள்வதும் என பொது இடங்களில் எல்லை மீறுவது போன்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

போதைக்கு எதிரான சபதம் ஏற்பு கண்துடைப்பு நாடகமாக சமீபத்தில் நடந்து முடிந்தது. வெறுமனே சபதமேற்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது. உறுதியான நடவடிக்கையும் கடுமையான கண்காணிப்பும்தான் மாற்றத்தை தரும்.

அந்த வகையில், இப்போதைய தேவை அரசின் கடும் கண்காணிப்பும் நடவடிக்கையும்தான். ஆனால், அரசின் நிர்வாகத் தோல்வியை தினசரி செய்திகளில் போதையால் நடக்கும் கொலை, தற்கொலை செய்திகளுமே உறுதி செய்கிறது.

கஞ்சா, அபின், கொகைன், போதை மாத்திரைகள் போன்றவற்றை மட்டுமே தடுக்க வேண்டும் என்பதாக தமிழக அரசு நினைத்து கொள்கிறது போலும். டாஸ்மாக் மதுபானம் சத்து டானிக் என்று ஆளும் திமுக அரசு கருதுகிறதா?

தமிழ்நாட்டில் போதை பெருகியதற்கு அடிப்படை காரணம் டாஸ்மாக் மதுபான விற்பனைதான். அதிலும் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து டாஸ்மாக் மதுபானத்தை சீரும் சிறப்புமாக சந்தைபடுத்தி குடிகாரர்களை வளைக்க விதவிதமாக திட்டம் போட்டு அமைச்சரே பேசுகிறார்.

திமுக அரசு அத்தியாவசிய தேவையான மின்சாரம், பால் போன்றவற்றின் விலையை ஏற்றியது மட்டுமல்லமல், டாஸ்மாக் மது விலையையும் அதிகரித்துவிட்டது. எனவே, மது போதையைவிட அதிக போதையை போதை ஆசாமிகள் தேடுவதால் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாகிறது.

ஒருபுறம் போதையால் இளைஞர்கள், ஏழைகள், சீரழிகிறார்கள் என்பதுடன், இன்னொருபுறம் போதை பொருள் சந்தையால் உருவாகும் சட்டவிரோத பண புழக்கத்தால் மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் பலனடைகிறார்கள்.

அந்த வகையில், சர்வதேச நிலவரங்களை பார்க்கையில் இங்கேயும் பின்புலத்தில் இடதுசாரி நக்சல் பயங்கரவாத குழுக்களும், இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

சமீபத்தில் மத்திய உளவுபிரிவான என்.ஐ.ஏ. மூலம் முஸ்லிம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போதைப் பொருட்களும் பயங்கரவாதமும் கைகோர்த்து தமிழகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை தமிழக அரசும் தமிழக உளவுத்துறையும் எப்போது உணர்ந்திடும்.

எப்போதும் இல்லாத அளவு இந்திய கடற்கரை துறைமுகங்கள், கடற்கரை பகுதிகளில், விமான பயணிகளிடமும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், நேற்றைக்கு இதுவரை கேள்விபடாத புது வகை போதை பொருள் ஐஸ் போதை பவுடர் ராமேஸ்வரம் வேதாளை அருகே பிடிபட்டுள்ளது.

போதை மருந்து புழக்கம் நமது மாநிலத்தின் உற்பத்தி திறனை முடக்கும், மக்களின் உடல் நலனை சீரழிக்கும். அதே சமயம், போதைக்கு அடிமையானவர்கள் மூலமாக பயங்கரவாத செயல்களை செய்யச் சொல்லும் அபாயமும் உள்ளது. போதை மருந்து வியாபாரம் மூலம் உருவாகும் நிதி பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தபடும் அபாயமும் உள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகள், உளவுத்துறை, காவல்துறை இணைந்து நமது இந்திய மண்ணில் போதை பொருட்கள் உள்ளே வராதபடி தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

போதை மருந்து புழக்கத்தையும் அதனால் ஏற்படும் சட்டவிரோத பண புழக்கத்தையும் அதன் மூலம் செயல்படுத்தபடும் பயங்கரவாதத்தையும் முற்றிலும் முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: hindu munnani
ShareTweetSendShare
Previous Post

ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!

Next Post

சுட்டெரிக்கும் வெயிலில் பாஜக பெண் கவுன்சிலர் உண்ணாவிரதம்!

Related News

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

பெருவில் அரசுக்கு எதிராக தொடரும் இளைஞர்கள் போராட்டம்!

புதுச்சேரி : சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம்!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய லெவொடோபி லகி லகி எரிமலை!

3 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் மலேசிய பெண்!

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி- பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது தாக்குதல்!

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜுக்கு நீதிமன்ற காவல் நிறைவு!

மத்திய பிரதேசம் : மாசடைந்த கிணற்று நீரை பருகிய பலருக்கு உடல் உபாதை!

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies