ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!
Jul 27, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட, திமுக எம்பி ஆ.ராசா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக எம்பி ஆ.ராசா, சனாதன தர்மத்தை எச்ஐவி மற்றும் தொழுநோயுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதாவது, எங்களைப் பொறுத்தவரை எச்ஐவி மற்றும் தொழுநோயைப் போல சமூக அவலம் நிறைந்த ஒரு நோயாகவே சனாதனத்தைப் பார்க்கிறோம் என பேசினார். ஆ. ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் நலசங்கத்தின் நிர்வாகி நிகிதா சாரா என்பவர், ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொழுநோய் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளைப் பற்றிப் பேசும்போது, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் வேண்டும், கண்ணியத்துடனும், பொறுப்புடனும் பேச வேண்டும்.

ஒவ்வொருவரின் பேச்சும், மக்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். ஆ.ராசாவின் பேச்சும், கருத்தும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, ஆ.ராசா, தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெற வேண்டும். மேலும், தனது பேச்சுக்காக பொதுவெளியில் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அனைத்துப் பொதுச் செயலாளர் முரளிதரன் பேசுகையில், ஆ.ராசாவின் பேச்சு துரதிருஷ்டவசமானது. எச்ஐவி மற்றும் தொழுநோயை இழிவான முறையில் பேசியதை ஏற்க முடியாது, மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆ.ராசாவின் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், அதன் காரணமாக அவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

Tags: a raja
ShareTweetSendShare
Previous Post

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

Next Post

தமிழகத்தில் போதை வஸ்து, பயங்கரவாதம் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Related News

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies