ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!
Jul 25, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசாவே மன்னிப்பு கேள் – ஆவேசமான மாற்றுத்திறனாளிகள் சங்கம்!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட, திமுக எம்பி ஆ.ராசா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக எம்பி ஆ.ராசா, சனாதன தர்மத்தை எச்ஐவி மற்றும் தொழுநோயுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அதாவது, எங்களைப் பொறுத்தவரை எச்ஐவி மற்றும் தொழுநோயைப் போல சமூக அவலம் நிறைந்த ஒரு நோயாகவே சனாதனத்தைப் பார்க்கிறோம் என பேசினார். ஆ. ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் நலசங்கத்தின் நிர்வாகி நிகிதா சாரா என்பவர், ஆ.ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொழுநோய் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளைப் பற்றிப் பேசும்போது, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் வேண்டும், கண்ணியத்துடனும், பொறுப்புடனும் பேச வேண்டும்.

ஒவ்வொருவரின் பேச்சும், மக்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். ஆ.ராசாவின் பேச்சும், கருத்தும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, ஆ.ராசா, தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது வாபஸ் பெற வேண்டும். மேலும், தனது பேச்சுக்காக பொதுவெளியில் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அனைத்துப் பொதுச் செயலாளர் முரளிதரன் பேசுகையில், ஆ.ராசாவின் பேச்சு துரதிருஷ்டவசமானது. எச்ஐவி மற்றும் தொழுநோயை இழிவான முறையில் பேசியதை ஏற்க முடியாது, மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆ.ராசாவின் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதும், அதன் காரணமாக அவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

Tags: a raja
ShareTweetSendShare
Previous Post

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

Next Post

தமிழகத்தில் போதை வஸ்து, பயங்கரவாதம் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Related News

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies