மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!
Aug 22, 2025, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!

சமரச தீர்வு மைய கட்டடத்தை திறந்து வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 10, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு என்று, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 தாலுக்காக்களில் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மைய புதிய கட்டடம் மற்றும் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடத்தை, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தவருக்கு, தான் என்ன செய்ய விரும்புகிறோம் என தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், சமரச மையங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்குத் தீர்வு காண சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும், அதனைச் சட்டவிதிகளின்படியே செய்ய முடியும். சமரசத் தீர்வு என்பது ஒரு சிறந்த நடைமுறை. இங்கு, குடும்பப் பிரச்சனைகள் மட்டுமல்லாது, வணிக ரீதியிலான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். சமரசத் தீர்வு மையத்தை உருவாக்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னணியில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி எம்.எம்.சுரேந்தரேஷ், “சமரசத் தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு” என்றார்.

அடுத்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, “நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல் சமரச தீர்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2005-ம் ஆண்டு விதைக்கப்பட்ட விதையாகும். இப்போதுதான் பலன் கொடுத்துள்ளது. இந்த மையங்கள் மூலம் ஏழைகளின் நலனை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

Tags: chennai high courtlok adalatNew buildingopening ceremonychief judgepartcipate
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : கோகோ காஃப் சாம்பியன்!

Next Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies