மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!

சமரச தீர்வு மைய கட்டடத்தை திறந்து வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு என்று, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 120 தாலுக்காக்களில் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சமரசத் தீர்வு மைய புதிய கட்டடம் மற்றும் துணை சமரசத் தீர்வு மைய புது கட்டடத்தை, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தவருக்கு, தான் என்ன செய்ய விரும்புகிறோம் என தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், சமரச மையங்களில் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்குத் தீர்வு காண சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும், அதனைச் சட்டவிதிகளின்படியே செய்ய முடியும். சமரசத் தீர்வு என்பது ஒரு சிறந்த நடைமுறை. இங்கு, குடும்பப் பிரச்சனைகள் மட்டுமல்லாது, வணிக ரீதியிலான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். சமரசத் தீர்வு மையத்தை உருவாக்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னணியில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி எம்.எம்.சுரேந்தரேஷ், “சமரசத் தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது சிறந்த தீர்வு” என்றார்.

அடுத்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, “நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல் சமரச தீர்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2005-ம் ஆண்டு விதைக்கப்பட்ட விதையாகும். இப்போதுதான் பலன் கொடுத்துள்ளது. இந்த மையங்கள் மூலம் ஏழைகளின் நலனை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

Tags: chennai high courtlok adalatNew buildingopening ceremonychief judgepartcipate
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : கோகோ காஃப் சாம்பியன்!

Next Post

மாசாணியம்மன் கோவில் வசூல் ரூ.1.34 கோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies