டெல்லி பிரகடனம்... 300 சந்திப்பும்... 200 மணி நேரமும்..!
Jul 26, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி பிரகடனம்… 300 சந்திப்பும்… 200 மணி நேரமும்..!

ஜி20 ஷெர்பா வெளியிட்ட புதிய தகவல்!

Web Desk by Web Desk
Sep 11, 2023, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் ஒருமித்த கருத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, இந்திய தூதர்கள் குழு 300 முறை சந்திப்பு நடத்தி, 200 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக, ஜி20 ஷெர்பா அமிதாப் கந்த் புதிய தகவலை தெரிவித்திருக்கிறார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இம்மாநாட்டின் சிறப்பம்சமே, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜி20 டெல்லி பிரகடனம், அனைத்து நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுதான். ஆனால், இதற்குப் பின்னணியில் எவ்வளவு சிரமங்களும், சிக்கல்களும் ஏற்பட்டிருக்கிறது என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

அதாவது, டெல்லி பிரகடனத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்களில் உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பானது. உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ரஷ்யா, சீனாவுக்கு ஆதரவானர்களுக்கும், எதிரானவர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் இருந்தன.

எனவே, டெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவி இருக்கிறது. இதையடுத்து, இந்திய தூதர்கள் குழு இரு தரப்பினரையும் 300 முறை சந்தித்து 200 மணிநேரம் இடைவிடாத பேச்சுவார்த்தை நடத்தி, 15 வரைவுகளை வெளியிட்டு, சிக்கலை தீர்த்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து ஜி20 உச்சி மாநாட்டின் ஷெர்பா அமிதாப் கந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜி20 மாநாட்டில் மிகவும் சிக்கலான பகுதி என்பது ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம். இத்தகைய புவிசார் அரசியல் ஒருமித்த கருத்தைக் கொண்டுவருவது மிகவும் சிக்கலானது.

இதனை சாத்தியப்படுத்த, 300 இரு தரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டு, 200 மணிநேரம் இடைவிடாத பேச்சுவார்த்தை நடத்தி, 15 வரைவுகள் வெளியிடப்பட்டன. இதன் விளைவாகவே, உச்சி மாநாட்டின் முதல் நாளிலேயே ஒருமித்த கருத்து ஏற்பட வழிவகுத்தது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்கு ஜி20 உச்சி மாநாட்டின் இணைச் செயலாளர்கள் ஈனம் கம்பீர், கே.நாகராஜ் நாயுடு ஆகியோர் உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்பதிவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் அமிதாப் கந்தை டேக் செய்து பதிலளித்திருக்கும் சசிதரூர், “மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள் அமிதாப் கந்த். வாழ்த்துக்கள்! நீங்கள் சிவில் சேவைக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவு துறை (ஐ.எஃப்.எஸ்.) பணிக்கு பதில் இந்திய ஆட்சிப் பணியை (ஐ.ஏ.எஸ்.) தேர்வு செய்ததன் மூலம், ஐ.எஃப்.எஸ். ஒரு திறமையான அதிகாரியை இழந்து விட்டது. இந்தியாவிற்கு ஜி20 மாநாட்டில் இது ஒரு அற்புதமான தருணம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: Sasi TharoorSherpa300 meeting200 hoursG20congradulatesdelhi declaration
ShareTweetSendShare
Previous Post

சுவாமி விவேகானந்தர் உரை நல்லிணக்கத்திற்கான அறைகூவலாக இன்றும் எதிரொலிக்கிறது-பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

பாரதிக்கு இரு கரம் கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies