ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது !
Sep 10, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது !

228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.

Web Desk by Web Desk
Sep 12, 2023, 12:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த ‘சூப்பர்-4’ போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீரர்களான ரோகித் சர்மா (56 ரன்கள்), சுப்மன் கில் (58 ரன்கள்) இருவரும் அரைசதம் அடித்தனர். பின்னர் கோஹ்லி – ராகுல் ஜோடி சேர்ந்தனர். அணியின் ஸ்கோர் 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் என்றிருந்தபோது, மழை கொட்டி தீர்த்தது. இதனால் போட்டி ‘ரிசர்வ்’ நாளான இன்று மாற்றப்பட்டது. இன்று, நிறுத்தப்பட்டதில் இருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இன்று தொடர்ந்த போட்டியில் லோகேஷ் ராகுலும், விராத் கோஹ்லியும் சிறப்பான முறையில் தங்கள்  ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அமர்களப்படுத்திய இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களைத்  திணறடித்தனர்.

லோகேஷ் ராகுல், விராத் கோஹ்லி இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் கோஹ்லி 122 ரன்கள், ராகுல் 111 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து 357 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி முதலிலிருந்தே  திணறியது. இடையில் மழையால் ஆட்டம் பாதித்து. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 32 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைப் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

நேற்று 98வது ரன் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 13,000 ரன் எடுத்த வீரர் ஆனார் கோஹ்லி. இவர், 267 இன்னிங்சில் (278 போட்டி) இந்த மைல்கல்லை அடைந்தார். சச்சின் (321 இன்னிங்ஸ், இந்தியா), பாண்டிங் (341, ஆஸி.,), சங்ககரா (363, இலங்கை), ஜெயசூர்யா (416, இலங்கை) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒருநாள் அரங்கில் 13,000 ரன்களை எட்டிய 5வது வீரர் ஆனார் கோஹ்லி.

 

Tags: asian cup cricketindai-pakistan matchrohit sarma
ShareTweetSendShare
Previous Post

”பாரதமே விஷ்வகுரு” அண்ணாமலை!

Next Post

பண்டிகைகளை நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கிறது திமுக- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies