ஆசியக் கோப்பை : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா !
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இலங்கையில் உள்ள கொழும்பில் அமைந்துள்ள பிரம்மதேச மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். கில் பவர்ப்ளே முடியும்வரை நிதான ஆட்டத்தை கடைபிடிக்க, ரோகித் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டு இருந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களைக் கடந்து வழுவான நிலையில் இருந்தது.

அதன் பின்னர் அதிரடியாக ஆட நினைத்த கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கில் தனது விக்கெட்டை இழந்தபோது இந்திய அணி 11.1 ஓவரில் 80 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் வந்த விராட் கோலி தனது விக்கெட்டை 2 ரன்களில் இழக்க இவருக்கு அடுத்து ரோகித் சர்மாவும் 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் கைகோர்த்த இஷான் கிஷன் மற்றும் கே.எல் ராகுல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக துனித் 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. இலங்கை அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 25 ரன்கள் எட்டியபோது 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இலங்கை அண் ஒரு கட்டத்தில் 25.1 ஓவரில் 99 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி எளிதாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியின் தனஞ்செயா மற்றும் துனித் கூட்டணி இந்திய அணிக்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

இவர்களின் ஆட்டம் ஒரு கட்டத்தில் இலங்கைக்கு வெற்றியை உறுதி செய்துவிடும் என்பது போல் இருந்தது. ஆனால் இவர்களின் கூட்டணியை ஒரு கட்டத்தில் ஜடேஜா முறியடித்தார். அதன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Tags: asian cup cricketindia cricketsrilanka cricket
ShareTweetSendShare
Previous Post

முதல்லே +2 பாடம் படிங்க!- சேகர் பாபு, உதயநிதி இருவருக்கும் அண்ணாமலை அறிவுறுத்தல்!

Next Post

கொலம்பியா மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முதல் இந்தியர்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies