பாஜக வாக்கு வங்கியை முடக்க சதி!
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக வாக்கு வங்கியை முடக்க சதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற்றால், அவர்கள் திமுகவை புறக்கணித்து, பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களிப்பார்கள் என கருதி, ஆதரவு அதிகாரிகள் மூலம் திமுக தடுத்து வருவதாக புகார் எழுந்துள்ள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி என்ற திட்டம், கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் ‘பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி ‘திட்டத்தின்கீழ், 5 ஏக்கருக்குக் கீழ் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் இணைய வேண்டும்.  இதற்காக, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை பயன்படுத்தி இணைய வேண்டும்.

இதற்கு விவசாயிகள் தங்களது அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி, ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையைப் பெற அஞ்சல் துறை ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இகேஒய்சியை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயின் வங்கிக் கணக்கில் நிதி உதவி நேரடியாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு வருடமும் 3 தவணையாக ரூ.2,000 வீதம், இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், கொரோனா காலத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் என்ற பெயரில், 41 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். ஆனால், இதில், வெறும் 25 லட்சம் பேர் மட்டுமே நிதி உதவி பெறத் தகுதியுள்ளவர்கள் என அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களது முழு விவரத்தைப் பதிவு செய்யவில்லை.

இதுவரை 14 -வது தவணை நிதி உதவி வழங்கிய மத்திய அரசு, 15 -வது தவணையை விடுவிக்கத் தயாராகி வருகிறது. இதனால், 15 -வது தவணை, நிதி உதவி பெறுவதில் தமிழக விவசாயிகளுக்குச் சிக்கில் நீடித்து வருகிறது.

தமிழக அரசு அலட்சியம் காரணமாக, மத்திய அரசு நிதி உதவி பெறுவதில், தமிழக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி, விவசாயிகளுக்குக் கிடைத்துவிட்டால், அவர்களது வாக்கு பாஜகவுக்குச் சென்றுவிடும் என்பதால், ஒரு சில அதிகாரிகள் மூலம் திமுக அண்டர்கிரவுண்ட் அரசியல் செய்து, நிதி உதவி கிடைக்காமல் செய்து வருவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: pm kissan care
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி பயணம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies