சுடலை ஆண்டவர் சுவாமி சிலை உடைப்பு – நெல்லையில் பதற்றம்!
Sep 9, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுடலை ஆண்டவர் சுவாமி சிலை உடைப்பு – நெல்லையில் பதற்றம்!

Web Desk by Web Desk
Sep 14, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே அருள்மிகு சுடலையாண்டவர் திருக்கோவிலில் உள்ள சுவாமி சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் சுமார் 5 அரை அடி உயரம் கொண்ட சுடலையாண்டவர் சுவாமி சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு, பொங்கல், அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் முக்கிய திருவிழாக் காலங்களில், பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல், தங்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில், திருக்கோவிலில் உள்ள 5 அரை அடி உயரம் கொண்ட அருள்மிகு சுடலையாண்டவர் சுவாமி சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து திருக்கோவிலுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சுவாமி சிலையை உடைத்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அருள்மிகு சுடலையாண்டவர் திருக்கோவில் சுவாமி சிலையை உடைத்த நபர்களை காவல்துறை உடனே கைது செய்யவேண்டும் என்று பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிலை உடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த செயலுக்கு இந்துமுன்னணி கடும் கண்டனம் தெரித்துள்ளது.

அருள்மிகு சுடலையாண்டவர் சுவாமி சிலை உடைக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. திருக்கோவில் அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: tamilagam
ShareTweetSendShare
Previous Post

ஆவின் நெய், வெண்ணெய்: வரலாறு காணாத அளவு உயர்வு – மக்கள் அதிர்ச்சி!

Next Post

தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் வரும் உச்சநீதிமன்றத்திற்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies