தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!
Aug 22, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!

அஜித் பவார் வெளியேறியதால் சிக்கல்!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார், கட்சி மற்றும் கட்சிச் சின்னத்துக்கு உரிமைகோரி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அக்டோபர் மாதம் 6-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால், யார் முதல்வர் என்பதில் இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆனால், பொருந்தாத கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியிலிருந்து வெளியேறி 38 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தார்.  இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் புகைச்சல் தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவை ஆளும் அரசுக்கு ஆதரவளித்தார். இதையடுத்து, அம்மாநிலத் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி, அஜித் பவார் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, சரத் பவார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது அக்டோபர் 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது. ஆகவே, அன்றையதினம் இரு தரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும்படி, சரத் பவார் மற்றும் அஜித் பவார் பிரிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இரு தரப்பில் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: hearingOctober 6Election commissionNCPPartySymbolName
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை : இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு !

Next Post

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies