தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!
Feb 6, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!

அஜித் பவார் வெளியேறியதால் சிக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார், கட்சி மற்றும் கட்சிச் சின்னத்துக்கு உரிமைகோரி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அக்டோபர் மாதம் 6-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால், யார் முதல்வர் என்பதில் இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆனால், பொருந்தாத கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியிலிருந்து வெளியேறி 38 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தார்.  இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் புகைச்சல் தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவை ஆளும் அரசுக்கு ஆதரவளித்தார். இதையடுத்து, அம்மாநிலத் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி, அஜித் பவார் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, சரத் பவார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது அக்டோபர் 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது. ஆகவே, அன்றையதினம் இரு தரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும்படி, சரத் பவார் மற்றும் அஜித் பவார் பிரிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இரு தரப்பில் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: October 6Election commissionNCPPartySymbolNamehearing
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை : இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு !

Next Post

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Related News

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

அணு ஆயுத வரம்பை அதிகரிக்க ரஷ்யா கோரிக்கை – டிரம்ப் மறுப்பு!

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை!

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies