தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!
Oct 6, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!

அஜித் பவார் வெளியேறியதால் சிக்கல்!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார், கட்சி மற்றும் கட்சிச் சின்னத்துக்கு உரிமைகோரி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அக்டோபர் மாதம் 6-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால், யார் முதல்வர் என்பதில் இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆனால், பொருந்தாத கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியிலிருந்து வெளியேறி 38 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தார்.  இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் புகைச்சல் தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவை ஆளும் அரசுக்கு ஆதரவளித்தார். இதையடுத்து, அம்மாநிலத் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி, அஜித் பவார் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, சரத் பவார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது அக்டோபர் 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது. ஆகவே, அன்றையதினம் இரு தரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும்படி, சரத் பவார் மற்றும் அஜித் பவார் பிரிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இரு தரப்பில் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: October 6Election commissionNCPPartySymbolNamehearing
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை : இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு !

Next Post

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Related News

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies