தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!
Jul 7, 2025, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!

அஜித் பவார் வெளியேறியதால் சிக்கல்!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார், கட்சி மற்றும் கட்சிச் சின்னத்துக்கு உரிமைகோரி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அக்டோபர் மாதம் 6-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால், யார் முதல்வர் என்பதில் இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆனால், பொருந்தாத கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியிலிருந்து வெளியேறி 38 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தார்.  இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் புகைச்சல் தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவை ஆளும் அரசுக்கு ஆதரவளித்தார். இதையடுத்து, அம்மாநிலத் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி, அஜித் பவார் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, சரத் பவார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது அக்டோபர் 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது. ஆகவே, அன்றையதினம் இரு தரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும்படி, சரத் பவார் மற்றும் அஜித் பவார் பிரிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இரு தரப்பில் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Election commissionNCPPartySymbolNamehearingOctober 6
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை : இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு !

Next Post

டெங்கு: மக்களே முகக்கவசம் கட்டாயம் – டாக்டர்கள் எச்சரிக்கை

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies