தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றம்!
Oct 23, 2025, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றம்!

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவிப்பு: பிரதமர் மோடி வரவேற்பு!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றத்தின் விவரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருப்பதற்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நேரம் நேற்று தொடங்கியவுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், “உச்ச நீதிமன்ற வழக்கு விவரங்கள் உட்பட அனைத்தும் தேசிய நீதித்துறை தரவுகளின் அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்படுகிறது? எத்தனை வழக்குகள் அரசியல் சாசன அமர்வின் கீழ் உள்ளது? இவற்றில் எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பன போன்ற அனைத்து விவரங்களையும் இனிமேல் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், இந்த செயல்பாடானது முக்கியமான தகவல்களை கொடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட தனித்துவமான மற்றும் தகவல் தரும் இணையதளமாகும். இது வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தில் நிகழ்நேர அடிப்படையில் தரவுகள் அனைத்தும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும். இந்த இணையதளத்தை திறந்தவுடன் வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைத்து விடும். எனினும், இதில் பல பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக தொடரப்பட்ட வழக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் நிலையில், அவற்றை விரைந்து விசாரித்து முடிக்கும் விதமாக, உடனடியாக புதிய அமர்வுகள் உருவாக்கப்படும். குறிப்பாக, இந்தாண்டு ஜூலை மாதம் வரையில் உச்ச நீதிமன்றத்தால் 5,500 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அதேசமயத்தில், 3,115 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் என்கிற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நடவடிக்கை பாராட்டுக்குரியது.இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் மற்றும் நீதி வழங்கும் முறையை மேம்படுத்தும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM Modisupreme court datanational departmentjustice dataframeworkappreciate
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ராஜ் சுப்பிரமணியம்.

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies