தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றம்!
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றம்!

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவிப்பு: பிரதமர் மோடி வரவேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய நீதித்துறை தரவு அமைப்புக்குள் உச்ச நீதிமன்றத்தின் விவரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருப்பதற்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நேரம் நேற்று தொடங்கியவுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், “உச்ச நீதிமன்ற வழக்கு விவரங்கள் உட்பட அனைத்தும் தேசிய நீதித்துறை தரவுகளின் அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்படுகிறது? எத்தனை வழக்குகள் அரசியல் சாசன அமர்வின் கீழ் உள்ளது? இவற்றில் எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்பன போன்ற அனைத்து விவரங்களையும் இனிமேல் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், இந்த செயல்பாடானது முக்கியமான தகவல்களை கொடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட தனித்துவமான மற்றும் தகவல் தரும் இணையதளமாகும். இது வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தில் நிகழ்நேர அடிப்படையில் தரவுகள் அனைத்தும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும். இந்த இணையதளத்தை திறந்தவுடன் வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைத்து விடும். எனினும், இதில் பல பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக தொடரப்பட்ட வழக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் நிலையில், அவற்றை விரைந்து விசாரித்து முடிக்கும் விதமாக, உடனடியாக புதிய அமர்வுகள் உருவாக்கப்படும். குறிப்பாக, இந்தாண்டு ஜூலை மாதம் வரையில் உச்ச நீதிமன்றத்தால் 5,500 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அதேசமயத்தில், 3,115 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் என்கிற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நடவடிக்கை பாராட்டுக்குரியது.இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் மற்றும் நீதி வழங்கும் முறையை மேம்படுத்தும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM Modisupreme court datanational departmentjustice dataframeworkappreciate
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-ராஜ் சுப்பிரமணியம்.

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies