ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!
Mar 15, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!

தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்திவரும் நிலையில், வாரணாசி நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தும்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் எதிரே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்துவிட்டு, இஸ்லாமிய மன்னர் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல, இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு நடத்த அனுமதி கோரி, 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வுக்குத் தடை கோரி, மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனளிக்கவில்லை. கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையின் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இம்மாதம் 2-ம் தேதியோடு, ஆய்வுக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் வளாகத்தை பாதுகாக்கும் வகையில், ஞானவாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் ராக்கி சிங் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஞானவாபி மசூதி ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: surveyarcheologyGnanavabi Mosqueevidencecourt order
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

சச்சின் சவுத்ரி தாக்கல் செய்த மனு- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies