ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!
Jan 14, 2026, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!

தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்திவரும் நிலையில், வாரணாசி நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தும்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் எதிரே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்துவிட்டு, இஸ்லாமிய மன்னர் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல, இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு நடத்த அனுமதி கோரி, 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வுக்குத் தடை கோரி, மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனளிக்கவில்லை. கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையின் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இம்மாதம் 2-ம் தேதியோடு, ஆய்வுக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் வளாகத்தை பாதுகாக்கும் வகையில், ஞானவாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் ராக்கி சிங் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஞானவாபி மசூதி ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: surveyarcheologyGnanavabi Mosqueevidencecourt order
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

சச்சின் சவுத்ரி தாக்கல் செய்த மனு- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies