ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!
Sep 27, 2025, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!

தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்திவரும் நிலையில், வாரணாசி நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தும்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் எதிரே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்துவிட்டு, இஸ்லாமிய மன்னர் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல, இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு நடத்த அனுமதி கோரி, 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வுக்குத் தடை கோரி, மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனளிக்கவில்லை. கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையின் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இம்மாதம் 2-ம் தேதியோடு, ஆய்வுக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் வளாகத்தை பாதுகாக்கும் வகையில், ஞானவாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் ராக்கி சிங் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஞானவாபி மசூதி ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: surveyarcheologyGnanavabi Mosqueevidencecourt order
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

சச்சின் சவுத்ரி தாக்கல் செய்த மனு- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies