ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!

தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்திவரும் நிலையில், வாரணாசி நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தும்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் எதிரே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்துவிட்டு, இஸ்லாமிய மன்னர் ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல, இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் சிருங்கார கௌரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் நாள்தோறும் வழிபாடு நடத்த அனுமதி கோரி, 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வுக்குத் தடை கோரி, மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனளிக்கவில்லை. கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தொல்லியல் துறையின் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இம்மாதம் 2-ம் தேதியோடு, ஆய்வுக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் வளாகத்தை பாதுகாக்கும் வகையில், ஞானவாபி மசூதிக்குள் இஸ்லாமியர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் ராக்கி சிங் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஞானவாபி மசூதி ஆய்வின்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: surveyarcheologyGnanavabi Mosqueevidencecourt order
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

சச்சின் சவுத்ரி தாக்கல் செய்த மனு- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies