"இண்டியா" அல்ல "இண்டி" கூட்டணி: பிரஹலாத் ஜோஷி புது விளக்கம்!
Jul 26, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இண்டியா” அல்ல “இண்டி” கூட்டணி: பிரஹலாத் ஜோஷி புது விளக்கம்!

சனாதனத்தை அவமதிப்பதாகவும் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் “இண்டியா” அல்ல “இண்டி” கூட்டணி. காரணம், ஏ என்பது கூட்டணியைக் குறிக்கும். இதை சேர்த்து சொன்னால் கூட்டணி என்கிற வார்த்தையை 2 முறை கூறுவது போலாகிவிடும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளக்கம் அளித்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக ராஜஸ்தான் சென்ற மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த 17 மாதங்களில் பெட்ரோல் மீதான கலால் வரியை 2 முறை குறைத்தது.

ஆனால், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் வாட் வரியைக் கூட்டி விட்டன. இதனால், மற்ற மாநிலங்களைவிட ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 முதல் 15 ரூபாய்வரை அதிகமாக விற்கப்படுகிறது. ராஜஸ்தானில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால், மக்கள் எல்லை தாண்டி அருகிலுள்ள மாநிலங்களுக்குச் சென்று பெட்ரோல் வாங்குகிறார்கள்.

ஊழல், சட்ட விரோதமாக சுரங்கங்களை நடத்துவது, கும்பல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் ராஜஸ்தான் மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது. அன்பு ஊற்றெடுக்கும் சுரங்கத்தைத் திறக்கப் போவதாகக் கூறிய எதிர்கட்சிகள், வெறுப்பை விற்கும் மாபெரும் வணிக வளாகத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள். “இண்டி” கூட்டணியில் இருப்பவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுகிறார்கள். வெறுப்பின் தூதுவரான ராகுல் காந்தி, அதற்கான அனுமதியை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்” என்றார்.

மேலும், ராஜஸ்தானின் துடு நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “எதிர்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் “இண்டியா” (I.N.D.I.A.) அல்ல; “இண்டி” (I.N.D.I.) கூட்டணி. ஏனெனில், ஏ (A) என்பது கூட்டணியைக் குறிக்கும். ஆகவே, “இண்டியா” என்று கூறினால், கூட்டணி என்கிற வார்த்தையை 2 முறை கூறுவதாக ஆகிவிடும். எனவே, அது “INDI” கூட்டணிதான்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சனாதன தர்மத்தை ஒரு நோய் என்கிறார். அவரது இந்த கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியும், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்டும் பதில் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Tags: I.N.D.I. allaianceAnurag ThakurI.N.D.I.A. allaianceRajasthanPress meet
ShareTweetSendShare
Previous Post

செய்தித் தொகுப்பாளர்கள் புறக்கணிப்பு “எமர்ஜென்ஸி 2.0”: “இண்டியா” கூட்டணிக்கு பா.ஜ.க. கண்டனம்!

Next Post

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் “காலி”!

Related News

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies