ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் "காலி"!
Sep 17, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் “காலி”!

அனந்த்நாக் சம்பவத்தைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 16, 2023, 08:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ அதிகாரிகள், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கூட்டுக்குழுவின் அதிரடி நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவுக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு ஜவான் வீரமரணமடைந்தார். மேலும், மோப்ப நாய் ஒன்றும் உயிரிழந்தது. கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய மருந்து மற்றும் மிகப்பெரிய ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டது.

அதேபோல, அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின்போது, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என 3 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இராணுவ அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி. உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த இராணுவம் கடும் கோவமடைந்தது. மேலும், பாகிஸ்தானுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

இது ஒருபுறம் இருக்க, அதிகாரிகளை இழந்ததால் ஆத்திரமடைந்த இராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாட பெரும் படையை களமிறக்கியது. அதேபோல, மாநில காவல்துறையும் களமிறக்கப்பட்டது. இந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் எல்லையில் ஊடுருவ முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, மேற்கண்ட தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் 2 பேரின் உடல்களை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீட்டனர். அதேசமயம், 3-வது தீவிரவாதியின் உடல் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி விழுந்து விட்டது. இந்த உடலை மீட்க முயன்றபோது, பாகிஸ்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மீட்பதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனினும், தீவிரவாதியின் உடலை மீட்க இந்த இராணுவம் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

Tags: encounterjammu kashmirBaramullaUri sector3 terrorist
Share
Tweet
SendShare
Previous Post

“இண்டியா” அல்ல “இண்டி” கூட்டணி: பிரஹலாத் ஜோஷி புது விளக்கம்!

Next Post

நாடகத்தை நிறுத்துங்கப்பா! – திமுகவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies