அண்ணாதுரை குடும்பத்தையே மறைத்து விட்டார்கள் – திமுக தலைவர்கள் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாதுரை குடும்பத்தையே மறைத்து விட்டார்கள் – திமுக தலைவர்கள் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன்களை நமக்குத் தெரியும், ஆனால், திமுகவை உருவாக்கியவர்களில் ஒருவரான அண்ணாதுரை குடும்பம் குறித்து யாருக்காவது தெரியுமா? தெரியாது. காரணம், அவர்களது குடும்பத்தினரை திமுக தலைவர்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று திமுகவை ஆரம்பித்த மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள். கட்சி, கொள்கை என நமக்கும் அண்ணாதுரை அவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், இன்றைய திமுக தலைவர்களைப் பார்க்கும்போது, அண்ணாதுரை அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ஏன் இந்தக் கட்சியை ஆரம்பித்தோம் என்று அவரே வருத்தப்பட்டிருப்பார்.

நேற்று திமுகவை ஆரம்பித்த மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை அவர்களது பிறந்த நாள். கட்சி, கொள்கை என நமக்கும் அண்ணாதுரை அவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இன்றைய திமுக தலைவர்களைப் பார்க்கும்போது, அண்ணாதுரை அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ஏன் இந்தக் கட்சியை ஆரம்பித்தோம்…

— K.Annamalai (@annamalai_k) September 16, 2023

கருணாநிதி மகன்களை நமக்குத் தெரியும். மகன்களை மட்டுமா, மருமகன், மகள், மருமகனின் மகன்கள், மகனின் மருமகன், பேரன்கள், என அத்தனை பேரையும் அரசியலில் எல்லாருக்கும் தெரியும்.

திமுகவை உருவாக்கிய அண்ணாதுரை குடும்பத்தில் யார் பெயராவது நமக்குத் தெரியுமா? யாராவது அரசியலில் இருக்கிறார்களா? எந்தப் பதவியிலாவது இருந்திருக்கிறார்களா? துரைமுருகன் மகனைத் தெரியும். பொன்முடி மகனைத் தெரியும், டி.ஆர்.பாலு மகனைத் தெரியும், ஆற்காடு வீராசாமி மகனைத் தெரியும், ஐ.பெரியசாமி மகனைத் தெரியும். ஆனால், அண்ணாதுரை குடும்பத்தை தமிழக மக்களிடமிருந்து மறைத்து விட்டார்கள்.

அண்ணாதுரை வளர்ப்பு மகன், டாக்டர் பரிமளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 2008 -ம் ஆண்டு, உடல் நலம் சரியில்லாமல் 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தவர், மருத்துவச் செலவுகளைப் பார்த்து வருத்தப்பட்டு, நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்துகொண்டார்.

அன்று திமுக ஆளுங்கட்சி. அவர்கள் கட்சியை உருவாக்கியவரின் மகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவர்கள் குடும்பம் அந்த மருத்துவச் செலவைத் தாங்கும் அளவில் இல்லை என்பதைக் கூடத் தெரியாமல்மகனுக்கும் மருமகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சியில் இருந்தார் கருணாநிதி. இதுதான் திமுகவை உருவாக்கிய அண்ணாவுக்கு இன்றைய திமுக கொடுக்கும் மரியாதை. அண்ணாதுரை இருக்கும்போது இருந்த திமுக வேறு, கருணாநிதி காலத்தில் வந்த திமுக வேறு.

பரிமளம் அவர்களது மகள் வயிற்றுப் பேத்தி பிரித்திகா ராணி, 2019 சிவில் சர்வீசஸ் தேர்வில், நாட்டிலேயே 171 ஆவது இடம் பிடித்துச் சாதனை படைத்து, இன்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக உள்ளார். நமது பாரத நாட்டுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார். தாத்தா பெயரைச் சொல்லியோ, குடும்பப் பின்னணியைச் சொல்லியோ ஒரு அடையாளம் தேட வேண்டிய தேவை அவருக்கு இல்லை. தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கியிருக்கிறார். அண்ணா அவர்கள் ஒரிஜினல் என்பதை அவரது பேத்தி (Great granddaughter) நிரூபித்திருக்கிறார். உதயநிதியால், TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறமுடியுமா? ஒரு சாதாரண தனியார் நிறுவன நுழைவுத் தேர்விலாவது தேர்ச்சி பெற முடியுமா?

கட்சியைத் தோற்றுவித்தவர் குடும்பத்தையே மதிக்காதவர்களா வாக்களித்த மக்களை மதிக்கப் போகிறார்கள். விளம்பர ஆட்சி நடத்தி, ஊழல் செய்து கொழுக்கும் திமுகவுக்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டப்போவது உறுதி. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி ஜி நல்லாட்சி தொடர, இம்முறை தமிழகமும் பெரும்பங்கு வகிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags: annamalai bjpbjp tamilnadu
ShareTweetSendShare
Previous Post

வஞ்சித்துவிட்டார் அமைச்சர் சக்ரபாணி – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

முன்னாள் அமைச்சர் பேச்சு – ஆதாரத்தோடு அண்ணாமலை கொடுத்த பதிலடி

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies