ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் "காலி"!
Jul 27, 2025, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் “காலி”!

அனந்த்நாக் சம்பவத்தைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ அதிகாரிகள், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கூட்டுக்குழுவின் அதிரடி நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவுக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு ஜவான் வீரமரணமடைந்தார். மேலும், மோப்ப நாய் ஒன்றும் உயிரிழந்தது. கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய மருந்து மற்றும் மிகப்பெரிய ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டது.

அதேபோல, அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின்போது, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என 3 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இராணுவ அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி. உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த இராணுவம் கடும் கோவமடைந்தது. மேலும், பாகிஸ்தானுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

இது ஒருபுறம் இருக்க, அதிகாரிகளை இழந்ததால் ஆத்திரமடைந்த இராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாட பெரும் படையை களமிறக்கியது. அதேபோல, மாநில காவல்துறையும் களமிறக்கப்பட்டது. இந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் எல்லையில் ஊடுருவ முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, மேற்கண்ட தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் 2 பேரின் உடல்களை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீட்டனர். அதேசமயம், 3-வது தீவிரவாதியின் உடல் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி விழுந்து விட்டது. இந்த உடலை மீட்க முயன்றபோது, பாகிஸ்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மீட்பதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனினும், தீவிரவாதியின் உடலை மீட்க இந்த இராணுவம் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

Tags: encounterjammu kashmirBaramullaUri sector3 terrorist
ShareTweetSendShare
Previous Post

“இண்டியா” அல்ல “இண்டி” கூட்டணி: பிரஹலாத் ஜோஷி புது விளக்கம்!

Next Post

நாடகத்தை நிறுத்துங்கப்பா! – திமுகவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies