இந்திய இரயில்வே அடுத்த ஆண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே பாரத் மெட்ரோவை அறிமுகம் செய்யவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் ஸ்லீப்பர் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் வந்தே மெட்ரோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய இரயில்வே சென்னையில் இரண்டு புதிய வகை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை உருவாக்குகிறது. ராஜ்தானி, சதாப்திக்கு பதிலாக வந்தே பாரத் இரயில் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இருப்பினும், தண்டவாளத்தில், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகச் செல்ல முடியும்.
வந்தே பாரத் இரயில்களின் ஸ்லீப்பர்கள் படிப்படியாக ராஜ்தானி இரயில்களுக்கு மாற்றாக இருக்கக் கூடும். மறுபுறம், சதாப்தி இரயில்களுக்குப் பதிலாக நாற்காலி கார் பதிப்பு இருக்கும்.
இந்திய இரயில்வேயால் 400 வந்தே பாரத் இரயில்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. முதலில் தயாரிக்கப்படும் 200 இரயில்கள் எஃகால் ஆனவை மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற இருக்கை வசதிகள் அமைக்கப்படும். இரண்டாதாக அலுமினியத்தால் செய்யப்பட்ட ஸ்லீப்பர் கோச்சுகள் இருக்கும்.
டெல்லி-கொல்கத்தா மற்றும் டெல்லி-மும்பை இரயில் பாதைகளில் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்பு அதிகாரிகளால் சரி செய்யப்படும். அதிகாரிகள் இரயில் வழித்தடங்களில் உள்ள பாலங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகளில் பணியாற்றுவார்கள்.
பயணிகளின் குறுகிய தூரப் பயணத்திற்கு வசதியாக வந்தே மெட்ரோ உருவாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த புதிய வகை வந்தே பாரத் இரயிலில் 12 பெட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.