வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படும்: பிரதமர் மோடி!
Sep 10, 2025, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்படும்: பிரதமர் மோடி!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன் பேட்டி!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடந்தாலும், இக்கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி, 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல, தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா,  தபால் அலுவலக மசோதா, பத்திரிக்கை மற்றும் பதிவு மசோதா ஆகிய 4 மசோத்தாக்களுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும், இன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கிய கூட்டம் நாளை முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரானது குறுகிய காலம் நடைபெறும் என்றாலும், தற்போதைய சூழலில் மிகப்பெரியது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுக்க இருக்கிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும். இக் கூட்டத் தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டுகால பயணமானது புதிய இடத்திலிருந்து தொடங்க உள்ளது.

2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவோம் என்பதுதான் இலக்கு. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் புதிய நாடாளுமன்ற கட்டடடத்தில் எடுக்கப்படும். புதிய நாடாளுமன்றத்தில் புதிய உறுதிமொழிகள் எடுக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்துக்கு எந்த தடைக் கல்லும் இருக்கக் கூடாது. சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறோம். ஜி20 உச்சி மாநாடு ஏழைகளின் குரலை ஒலிக்கக் கூடியதாக இருந்தது” என்றார். அதேபோல, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியதும் உரையாற்றிய பிரதமர் மோடி, இது வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய தொடர் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiPress meetParliament special session
ShareTweetSendShare
Previous Post

தமிழ் மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: அண்ணாமலை!

Next Post

இந்து பெண்கள் மீது தாக்குதல் – காவல்துறை அராஜகம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies