திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை – முழு விவரம்!
Aug 14, 2025, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை – முழு விவரம்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலின் மலைமேல் அமர்ந்துள்ள உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை வைத்துச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று அக்டோபர் 1 -ம் தேதி வரை, அதாவது 14 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி, மலை உச்சியில் உள்ள விநாயகருக்கு இன்று 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கொழுக்கட்டை, மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோவும், மலை உச்சியில் உள்ள விநாயகர் சன்னதியில் 75 கிலோவும் வைத்து பூஜை செய்யப்படும். பூஜைக்குப் பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

சதுர்த்தி விழாவையொட்டி, மாணிக்க விநாயகர் சன்னதியில் உள்ள மூலவர் தினமும், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்டவைகளில் காட்சி தருவார்.

மேலும், பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி என பல்வேறு வடிவங்களில் காட்சி தருவார்.

இன்று அதிகாலை முதலே, திருச்சி மட்டுமல்லாது, கரூர், தஞ்சை, புதுக்கேட்டை, பெரம்பலூர், அரியலூர் என அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags: trichy
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மணல் சிற்பத்தால் பாரத அணிக்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies