திமுக ஆட்சியில் 17 பசுக்கள் துடிதுடிக்க இறப்பு – அண்ணாமலை அதிர்ச்சி தகவல்!
Jan 14, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் 17 பசுக்கள் துடிதுடிக்க இறப்பு – அண்ணாமலை அதிர்ச்சி தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 11:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில், பழனியில் உள்ள கோ சாலையில், 17 பசுக்களுக்கு சரியான உணவு கிடைக்காமல், துடிதுடித்து இறந்துள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-ம் கட்ட பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், திமுகவில் தலைவருக்கு தனி இருக்கை உள்ளது. மற்றவர்களுக்கு வேறு இருக்கை இருக்கும். திமுகவில் தலைமுறை தலைமுறையாக ஒரே ஒருவரின் குடும்பமே கோலோச்சி வருகிறது. என்னதான், தகுதி, திறமை இருந்தாலும் சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வரமுடியாது. இதுதான் திமுகவின் இன்றைய நிலை.

தமிழகத்தை பொறுத்தவரை கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுகிய நில மன்னர்களும் சர்வாதிகாரம் செய்து வருகின்றனர். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

தற்போது, திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி, பாஜக பேனர்களும், போஸ்டர்களும் கிழிக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பல ஆண்டுகள் நீடிக்காது. இதை காவல்துறை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதுவரை பாஜகவைச் சேர்ந்த தொண்டர்கள் மீது 181 தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 17 காவல் துறை அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். தவறாக செயல்பட்ட அத்தனை காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம்.

தமிழகத்தில் அதிக வருமானம் வரக்கூடிய திருக்கோவிலில் பழனியும் ஒன்று. இந்த திருக்கோவிலுக்கு 15,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. ஆனால், 200 கோடி ரூபாய்க்கு மட்டுமே வருமானம் காட்டப்படுகிறது. ஒரு பக்கம் கோவில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுபக்கம் கோவில் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது

இங்குள்ள கோசலையில் 17 பசுக்கள் உணவு கொடுக்கப்படாமல் பசியால் இருந்துள்ளன. பசியினால் துடித்து இறந்துபோன பசுக்களின் பாவம் சும்மா விடாது என்று சாபம் விட்டார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைப்பு!

Next Post

ஜம்மு-காஷ்மீர் – விமானப் படை சாகச நிகழ்ச்சி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies