ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகள் சேகரிப்பு!
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகள் சேகரிப்பு!

இந்திய விண்வெளிஆராய்ச்சி மையம் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 18, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம், அறிவியல் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கி இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர், இரு வாரங்கள் ஆய்வில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. தற்போது உறக்க நிலையில் உள்ள ரோவர், செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் சூரியன் உதித்த பிறகு மீண்டும் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2-ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப் பாதையில் பயணம் மேற்கொண்டு வரும் ஆதித்யா எல்-1 விண்கலம், நாளை (செப்டம்பர் 19-ம் தேதி) புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேறி சூரியனை நோக்கி பயணம் செய்யவுள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சென்று, சூரியனை ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.

இந்த நிலையில், 50,000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது, செப்டம்பர் 10-ம் தேதியே ஆதித்யா எல்-1 விண்கலம், சூப்ரா தெர்மல் அண்ட் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவியைப் பயன்படுத்தி அறிவியல் தரவை  சேகரிக்கத் தொடங்கி விட்டதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இது பூமியின் ரேடியசில் இருந்து 8 மடங்கு அதிகமாகும். இந்த ஸ்டெப்ஸ் கருவியில் 6 சென்சார்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு வெவ்வேறு திசைகளிலும் ஆய்வுகள் நடைபெறுகிறது.

ஸ்டெப்ஸ் கருவி அதிவெப்ப மற்றும் ஆற்றல் மிக்க அயனிகள் மற்றும் எலெக்ட்ரான்களை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வட்டப்பாதையில் சேகரித்த தரவு, பூமியின் துகள்கள், காந்தப் புலன் பற்றிப் பகுப்பாய்வு செய்வதாகவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. அகமதாபாத்தில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் (SAC) இணைந்து இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால் (PRL) வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Aditya-L1 Mission:
Aditya-L1 has commenced collecting scientific data.

The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.

This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri

— ISRO (@isro) September 18, 2023

 

Tags: aditya l1SPACECRAFTstartedscientific mission
ShareTweetSendShare
Previous Post

புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது புதிய நம்பிக்கை பிறக்கும்!

Next Post

டாப் 20 நாடுகளில் இந்தியாதான் நம்பர் 1!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies