ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகள் சேகரிப்பு!
Jul 2, 2025, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகள் சேகரிப்பு!

இந்திய விண்வெளிஆராய்ச்சி மையம் தகவல்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம், அறிவியல் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கி இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர், இரு வாரங்கள் ஆய்வில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. தற்போது உறக்க நிலையில் உள்ள ரோவர், செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் சூரியன் உதித்த பிறகு மீண்டும் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2-ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப் பாதையில் பயணம் மேற்கொண்டு வரும் ஆதித்யா எல்-1 விண்கலம், நாளை (செப்டம்பர் 19-ம் தேதி) புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேறி சூரியனை நோக்கி பயணம் செய்யவுள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சென்று, சூரியனை ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.

இந்த நிலையில், 50,000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது, செப்டம்பர் 10-ம் தேதியே ஆதித்யா எல்-1 விண்கலம், சூப்ரா தெர்மல் அண்ட் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவியைப் பயன்படுத்தி அறிவியல் தரவை  சேகரிக்கத் தொடங்கி விட்டதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இது பூமியின் ரேடியசில் இருந்து 8 மடங்கு அதிகமாகும். இந்த ஸ்டெப்ஸ் கருவியில் 6 சென்சார்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு வெவ்வேறு திசைகளிலும் ஆய்வுகள் நடைபெறுகிறது.

ஸ்டெப்ஸ் கருவி அதிவெப்ப மற்றும் ஆற்றல் மிக்க அயனிகள் மற்றும் எலெக்ட்ரான்களை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வட்டப்பாதையில் சேகரித்த தரவு, பூமியின் துகள்கள், காந்தப் புலன் பற்றிப் பகுப்பாய்வு செய்வதாகவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. அகமதாபாத்தில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் (SAC) இணைந்து இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால் (PRL) வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Aditya-L1 Mission:
Aditya-L1 has commenced collecting scientific data.

The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.

This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri

— ISRO (@isro) September 18, 2023

 

Tags: SPACECRAFTstartedscientific missionaditya l1
ShareTweetSendShare
Previous Post

புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது புதிய நம்பிக்கை பிறக்கும்!

Next Post

டாப் 20 நாடுகளில் இந்தியாதான் நம்பர் 1!

Related News

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies