புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது புதிய நம்பிக்கை பிறக்கும்!
Jun 15, 2026, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது புதிய நம்பிக்கை பிறக்கும்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 18, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த கட்சி ஆட்சியிலும், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்ததை இந்த நாடாளுமன்றக் கட்டடம் கண்டிருக்கிறது. நாம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழையும்போது நமக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார். பிறகு, டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு வெற்றிகமாக நடத்தப்பட்டதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். தொடர்ந்து உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நாம் அனைவரும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்துக்கு விடை கொடுக்கவிருக்கிறோம்.

இக்கட்டடம் சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் இந்தியாவின் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் இடமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பிறகு, இது நாடாளுமன்றம் என்கிற அடையாளத்தைப் பெற்றது. இக்கட்டடத்தைக் கட்டுவதற்கான முடிவு அந்நிய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

ஆனால், இக்கட்டடத்தைக் கட்டுவதற்கான பணம், கட்டுமானத்துக்கான உழைப்பு நம்முடைய மக்களுடையது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.  நாடாளுமன்றத்தில் நமக்குள் பல கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்திருக்கிறது. அதேசமயம், அதையும் தாண்டி நம்மிடம் ஒரு நட்பு இருக்கிறது.

இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் எங்களை விட பத்திரிக்கையாளர்கள் அதிக நேரம் செலவளித்திருப்பார்கள். அவர்களுக்கு இக்கட்டடத்தை விட்டுச் செல்வது வருத்தம் அளிக்கும் விஷயமாக இருக்கும். எனினும், இந்த இடம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக நீடிக்கும்.

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்திருக்கிறது. அதேபோல, சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவால் மட்டும் கொண்டாடப்படவில்லை. ஒட்டுமொத்த உலகமும் பெருமிதப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதித்த அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டுகிறேன். அதேபோல ஜி 20 உச்சி மாநாட்டின் வெற்றி என்பது 140 கோடி இந்தியர்களின் மகத்தான வெற்றி.

ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 உச்சி மாநாடு பதிலளித்திருக்கிறது.

ஜி20 உச்சி மாநாட்டில் கூட்டு பிரகடனம் ஏற்படுவதை இந்தியாவின் சக்தி உறுதிப்படுத்தியது. உலக நாடுகள் நம் பாரத நாட்டை நண்பனாக பார்க்கின்றன. இந்தியா தற்போது தன்னம்பிக்கை மிக்க நாடாக மிளர்கிறது. நாம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு செல்கிறோம். ஆனால், வரும் தலைமுறையினருக்கு பழைய நாடாளுமன்ற கட்டடம் எப்போதும் உத்வேகத்தை அளிக்கும். முன்பு, நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும், பங்களிப்பும் அதிகரித்து வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக இக்கட்டடத்திற்குள் நுழைந்தபோது மக்களிடமிருந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்று நான் நினைக்கவில்லை. மேலும், நான் நாடாளுமன்றத்துக்குள் ஒரு எம்.பி.யாக உள்ளே நுழைந்தபோது ஜனநாயகத்தின் கோவில் என்பதற்காக கீழே விழுந்து வணங்கினேன். அது எனக்கு உணர்ச்சி மிகுந்த தருணம்.

ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை, இரயில்வே பிளாட்பார்மில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழையும் என கனவா கண்டிருக்கும்? இந்த நாட்டு மக்களின் பேரன்புக்கு பெரும் நன்றி.

4 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த கட்சி ஆட்சியிலும், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்ததை இந்த நாடாளுமன்றக் கட்டடம் கண்டிருக்கிறது. கடந்த காலத்தையும், எதிர்க்காலத்தையும் இணைக்கும் இடத்தில் நாம் இருப்பது பெருமையாக இருக்கிறது. நாம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழையும்போது நமக்கு புதிய நம்பிக்கை பிறக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் இந்த நாடாளுமன்றக் கட்டடம் குறித்த தங்கள் நினைவுகளை பகிருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiSpeechPaliament Special Session
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Next Post

ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகள் சேகரிப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies