தூதர் வெளியேற்றம்: கனடாவுக்கு இந்தியா பதிலடி!
Aug 15, 2025, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூதர் வெளியேற்றம்: கனடாவுக்கு இந்தியா பதிலடி!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இரு நாடுகளிடேயே விரிசல்!

Web Desk by Web Desk
Sep 19, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை வெளியேற்றி இந்தியா அதிரடி காட்டி இருக்கிறது.

சீக்கியர்களுக்கு தனி மாநிலம் கேட்டு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரிவினைவாதிகள் கனடா நாட்டில்தான் அதிகளவில் வசிக்கின்றனர். எனவே, காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்களுக்கு எதிராக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு, தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவித்தாலும், அந்நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

இந்த நிலையில்தான், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றி இருக்கிறது. ஏற்கெனவே இந்தியா- கனடா இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இச்சம்பவம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக கனடா நாட்டு எதிர்கட்சிகள் கூட்டிய நாடாளுமன்ற அவசரக் கூட்டத் தொடரில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேலானி ஜூலி, “நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டு உள்ளன. கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கனடா மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது.

இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இந்த விஷயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி, இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறோம். அவர் இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்று கூறியிருக்கிறார்.

கனடாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்தியாவும் அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதருக்கு உடனடியாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்னும் 5 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Canadian DiplomatIndiaCanadaExpelsIndian diplomat
ShareTweetSendShare
Previous Post

ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!- வருமான வரி துறை.

Next Post

கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சஜாக்!

Related News

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies