தூதர் வெளியேற்றம்: கனடாவுக்கு இந்தியா பதிலடி!
Jan 14, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூதர் வெளியேற்றம்: கனடாவுக்கு இந்தியா பதிலடி!

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இரு நாடுகளிடேயே விரிசல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 19, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை வெளியேற்றி இந்தியா அதிரடி காட்டி இருக்கிறது.

சீக்கியர்களுக்கு தனி மாநிலம் கேட்டு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரிவினைவாதிகள் கனடா நாட்டில்தான் அதிகளவில் வசிக்கின்றனர். எனவே, காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்களுக்கு எதிராக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு, தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவித்தாலும், அந்நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.

இந்த நிலையில்தான், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றி இருக்கிறது. ஏற்கெனவே இந்தியா- கனடா இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இச்சம்பவம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக கனடா நாட்டு எதிர்கட்சிகள் கூட்டிய நாடாளுமன்ற அவசரக் கூட்டத் தொடரில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேலானி ஜூலி, “நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டு உள்ளன. கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கனடா மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது.

இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இந்த விஷயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி, இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறோம். அவர் இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்று கூறியிருக்கிறார்.

கனடாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்தியாவும் அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதருக்கு உடனடியாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்னும் 5 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: IndiaCanadaExpelsIndian diplomatCanadian Diplomat
ShareTweetSendShare
Previous Post

ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!- வருமான வரி துறை.

Next Post

கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆபரேஷன் சஜாக்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies