சனாதன தர்மம்- முரசொலிக்கு பாரதியார் மூலம் பதிலடி கொடுத்த தமிழக பாஜக!
Mar 15, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம்- முரசொலிக்கு பாரதியார் மூலம் பதிலடி கொடுத்த தமிழக பாஜக!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர், மஹாகவி பாரதியாரின் சனாதன தர்மம் குறித்த சிந்தனைகளை, தற்போது மக்கள் பார்வைக்கு, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சனாதனம் தர்மம் குறித்து.கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர், புரட்சிக் கவிஞர் பாரதியாரின் கருத்துக்களை மேற்காட்டியுள்ளார். அதாவது, புதுவை “இந்தியா”, 1909 ம் ஆண்டு, செப்டம்பர் 4 இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரையை சுட்டி முரசொலிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், சனாதன தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும், கிளைகளும் சூரிய ஜோதியிலே காணப்படும் ஏழுவகை வர்ணங்களைப்போல அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களாகுமேயல்லாமல், குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமது அழிவுக்கு கருவிகளாக மாட்டா.

அடடா! இந்த ஹிந்துக்களிலே வைஷ்ணவன், சைவன், அத்துவைதி, சாக்தன் முதலிய எத்தனை கிளைகள். இவர்கள் எப்படி விளங்கப் போகிறார்கள்? என்று கூறி சிரிப்பவர்கள் நமது தேச சரித்திரமட்டுமேயன்றி வேறெந்த நாட்டு சரித்திரமும் அறியாதவர்கள்.

இவர்கள் சனாதன தர்மத்தின் இயல்பை மட்டுமேயன்றி வேறெந்த மதத்தின் இயல்பையும் அறியாதவர்கள். மனித அறிவானால் ஆச்ரயிக்கப்பட்டுவரும் எந்த மார்க்கத்திலும் ஆயிரக்கணக்கான கிளைகள் இருத்தல் அத்யாவசியம் என்ற சாதாரண உண்மை இந்த குழந்தைகளுக்கு தெரியாது.

உயிர்த்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல கிளையுடைமை ஒரு லட்சணம். உயிரடனிருக்கும் ஒரு மனிதனுக்குப் பலவகைப்பட்ட அவயவங்கள் இருந்து பலவகைத் தொழில்கள் நடத்துவதை பார்த்து இக்குழந்தைகள் யோசனை செய்யவில்லை. உயிருடன் இருக்கும் ஒரு மரத்திற்குப் பல மலர்களும், கிளைகளும், கொம்புகளும் இருப்பதைக் கண்டு இவர்கள் சிந்தனை செய்தது கிடையாது. வெட்டுண்டு கிடக்கும் செத்த மரக்கட்டை தான் எப்போதும் ஒரே ரூபமுள்ளதாய், பல கிளைகளற்றதாய் இருக்கும்.

அந்த மரக்கட்டை போல நமது பாரத ஜாதியும், சனாதன தர்மம் ஆகி விடவில்லையென்று விசனமடைவோரைப் பார்க்கும் போது, சங்கீத வித்வானைப் பார்த்து அழத் தொடங்கிய ஆட்டிடையன் கதை ஞாபகத்திற்கு வருகின்றது.

பௌத்தம், கிருஸ்துவம் முதலிய யாதேனும் ஓர் மார்கத்தைப் பற்றிய பழக்கம் இருந்தால் இவர்கள் நமது சனாதன தர்மத்தில் கிளைகள் இருப்பது பற்றி குறை சொல்ல வரமாட்டார்கள்.

ஐயோ! சனாதன கர்பத்திலே பல வகுப்புகள் இருப்பதாகச் சொல்லி நிந்தனை செய்ய வரும் இவர்கள், அந்த வகுப்புகளின் யதார்த்த ரூபத்தையும், குணத்தையும், தொழிலையும் பற்றி ஒரு க்ஷணமேனும் ஆலோசனை செய்திருக்கிறார்களா?

சக்தி மார்க்கம், கிருஷ்ண பத்தி, சிவயோகம், பிரம்மானுபவம் என்பனவற்றில் எதைக் கொய்தெறிந்து விடலாமென்று இவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்? அழகிய ஜீவ விருக்ஷத்திலே பசுமை வாய்ந்த இலைகளையா? இனிய தோற்றமுடைய நறுமலர்களையா? கனிகளையா? எந்த பகுதியை நாசம் செய்ய சொல்லுகிறார்கள்?

சனாதன தர்மம் ஒன்று. பரஸ்பர சஹோதரத்துவமுடைய பல கிளைகள் கொண்ட ஒரு பொருள். நம்முள்ளே பொது நலத்திற்கு விரோதமான வேற்றுமைகளை அவரவர்கள் கண்டா இடத்தில் நீக்கிக் கொள்ள வேண்டுமேயல்லாது நமது பொது நாள் செய்திகளைக் காட்டிலும் வேற்றுமைச் செய்திகள் வெகு முக்கியம் போல பின்னவற்றையே பிரமாதமாக முரசொலியுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கலாகாது என தெரிவித்துள்ளார்.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமைத் தொகை:-ஏழை பெண்களுக்குக் கிடைக்கவில்லை!

Next Post

விநாயகருக்குப் பூஜை செய்த வளர்ப்பு யானைகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies