இந்து எழுச்சி நாயகன்-வீரத்துறவி ஜெயந்தி !
Jul 11, 2025, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து எழுச்சி நாயகன்-வீரத்துறவி ஜெயந்தி !

Web Desk by Web Desk
Sep 19, 2023, 07:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1927 -ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி சீர்காழி அருகில் உள்ள சட்டநாதபுரத்தில் ராமசாமி -செல்லம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஆர்.ராம கோபாலன்.

இவருடன் உடன்பிறந்தவர்கள் 11 பேர். ராம கோபாலனுக்கு 1934 -ம் ஆண்டு பூணூல் போட்டு முறையாகச் சடங்குகள் செய்யப்பட்டன. 1932 முதல் 1943 வரை சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் கல்வி பயின்றார்.

1943 -ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து சென்னையில் வேப்பேரியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பை முடித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரியில் தன்னோடு சேர்ந்து படித்த முத்து என்பவர் மூலம் ஆர்எஸ்எஸ் அறிமுகம் கிடைத்தது. அப்போது, 1944 -ம் ஆண்டு முத்து உடன் கோபாலபுரத்தில் நடந்த ஷாகாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அப்போது, முதல் ஆர்எஸ்எஸ் மீது தீவிர பற்று ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 1947 -ல் குடியாத்தத்திலிருந்த வடக்கு ஆற்காடு எலக்ட்ரிக்கல் சப்ளை கார்ப்பரேஷனில் ஜூனியர் பொறியாளர் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்துக் கொண்டே குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஷாகா ஆரம்பித்து நடத்தினார். அவர் நடத்திய முதல் ஷாகா இதுதான்.

1949 -ம் ஆண்டு முதல் ஆர்ஆர்எஸ் முழு நேர ஊழியராக பணியாற்றினார். 1952 -ம் ஆண்டு முதன் முதலில் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். 1960-ம் ஆண்டு பாலக்காடு தாலுகா அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1964 -ம் ஆண்டு பிரசாந்த பிரமுக் ஆனார். 1965-ல் ஆர்எஸ்எஸ் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1980 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கரூரில் ஆர்எஸ்எஸ் மாநில கூட்டம் நடந்தது. இதிலே தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒரு தனி இயக்கம் தேவை என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தக் கூட்டத்திலே இந்து முன்னணி என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அதன் அமைப்பாளராக அப்போது ஆர்.ராம கோபாலன் நியமிக்கப்பட்டார்.

சில ஆண்டுகள் ஆர்எஸ்எஸின் மாநில இணை அமைப்பாளர் மற்றும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் என இரண்டு பொறுப்புகளிலும் செயல்பட்டார்.

1982 -ம் ஆண்டு இந்து எழுச்சி மாநாட்டுக்குப் பிறகு குமரி மாவட்டத்தில் பெரிய அளவில் கலவரம் வெடித்து. இதனால், இந்து முன்னணி போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

தடையை மீறி போராட்டம் நடத்தி கைதானார். 1984 -ம் ஆண்டு ஜூலை 18 -ம் தேதி கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு ராஜபாளையம் செல்ல மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் மதுரையில் இறங்கியதும், அவர் பின்னால் வந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் சிலர் ஆர்.ராம கோபாலனை படுகொலை செய்ய முயன்றனர். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மருத்துவச் சிகிச்சைக்குப் பின்பு படிப்படியாக நலம் பெற்றார். பின்பு, பட்டி, தொட்டி எங்கும் இந்து முன்னணியை கொண்டு சென்றார்.

தமிழகம் முழுவதும் ஆன்மீகத்தை வளர்ப்பது, கலாச்சாரத்தை வளர்ப்பது, பாரம்பரியத்தை வளர்ப்பது, நாகரீகத்தை வளர்ப்பது, தேசப்பற்றை வளர்ப்பது எனத் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார் ராம கோபாலன்.

இப்படி பொதுவாழ்வில் புகழ் பெற்ற ராம கோபாலன் ஜி, 2020 -ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்தாலும், அவரது புகழ் ஓங்கி ஒலித்துக் கொண்டே உள்ளது. ஜெய் ஹிந்த்.

Tags: ramagopalan jihindhu munani
ShareTweetSendShare
Previous Post

பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து – நீதிமன்றம் அதிரடி

Next Post

வாட்ஸ் ஆப் சேனலில் பிரதமர் நரேந்திர மோடி !

Related News

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies