பிரதமர் மோடி வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்து புதிய பாராளுமன்ற அலுவலக புகைபடங்களை பதிவேற்றியுள்ளார்.
பேஸ் புக்கின், ”மெட்டா” நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், தற்போது ‘வாட்ஸ் ஆப் சேனல்” என புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில் பின் தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்களைப் பகிரவும் பிறருக்கு அனுப்ப முடியும்.
கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாட்ஸ் சேனலில் இணைந்தார். தனது முதல்வர் அலுவலகத்தை வாட்ஸ் சேனலில் இணைந்து அதன் மூலமாக பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து வருகிறார்.
இப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கிய நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில், பிரதமர் அலுவலக அறை, பார்வையாளர்கள் அறை உள்ளிட்ட புகைபடங்களைத் தனது வாட்ஸ்ஆப் சேனலில் பதிவேற்றியுள்ளார்.