இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளைத் வரும் 24ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில், திருநெல்வேலி முதல் சென்னை வரை செல்லும் வந்தே பாரத் இரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.
வரும் 24ம் தேதி, பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பின்னர், இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் இரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.
அந்த 9 வந்தே பாரத் இரயில்களில், திருநெல்வேலி முதல் சென்னை வரை செல்லும் வந்தே பாரத் இரயிலும் அடங்கும். பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக நெல்லை-சென்னை வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி முடிந்த பின்னர், 12லிருந்து 12.30 மணிக்குள் இந்த இரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 9 ரயில்களில், தென்னக இரயில்வே சார்பில் நெல்லை-சென்னை ரயில் ஒன்று, அதேபோல், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான இரயில் மற்றும் சென்னையிலிருந்த விஜயவாடா வரையிலான இரயில் என மொத்தம் 3 இரயில்கள் வருகிறது.
தற்போது வரும் இரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். கூட்டம் அதிகமாக இருந்தால், பெட்டிகளை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.