பாஜகவின் சமூக நீதியைப் பின்பற்றுவாரா தமிழக முதல்வர்? - நாராயணன் திருப்பதி கேள்வி!
Oct 26, 2025, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவின் சமூக நீதியைப் பின்பற்றுவாரா தமிழக முதல்வர்? – நாராயணன் திருப்பதி கேள்வி!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியைப் பின்பற்றுவாரா முதல்வர்? எனத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், பாஜக அரசு அமைந்த 2014 -ம் ஆண்டுக்குப் பின்னர் தான் மத்திய அரசின் துறைகளில் உரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2014 முதல் தற்போது வரை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 % பட்டியலினத்தைச் சேர்ந்தோருக்கும், 8 % பழங்குடியினத்தோருக்கும், 30 % இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவு மாணவ, மாணவிகள் இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-21ல், 28 % பட்டியலின மாணவர்களும், 47% பழங்குடியின மாணவர்களும், 31.7% இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் மத்திய அரசின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இணையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது பாஜக அரசில் இட ஒதுக்கீட்டைச் சிறந்த அளவில் செயல்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.

ஆனால், தி மு க அங்கம் வகித்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்த போது 12 % க்கும் குறைவான இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மட்டுமே மத்திய அரசுப் பணிகளிலிருந்தனர் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியவர், 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முழுமையாகப் பணி நியமனம் செய்யாதது ஏன்? என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும்.

இனிமேலும் பாஜக அரசு குறித்த உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியைப் பின்பற்றுவாரா முதல்வர்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjpnarayanan thiruppathi
ShareTweetSendShare
Previous Post

பாஸ்ட்புட் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் – அதிகாரிகள் அதிரடி!

Next Post

அதிமுக மாஜி அமைச்சர் நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு? – முழு விவரம்!

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies