ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்!- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்!- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

Murugesan M by Murugesan M
Sep 20, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம்  செயல்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும்.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதாவது, அமராவதியில் சட்டசபையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்க முடிவு செய்தார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ஆந்திர தலைநகராக அமராவதியே தொடர வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, அமராவதியே தலைநகராக தொடர வேண்டும் என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடைவிதிக்கப்பட்டது. இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆந்திராவின் தலைநகரை விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்போவதாக ஜெகன்மோகன் அறிவித்திருந்தார்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தசரா பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமி (அக்டோபர் 23) முதல் விசாகப்பட்டினம் ஆந்திர தலைநகராக செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன்,  ‘அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும். விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகங்களை தேர்வுச் செய்வதற்கான குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, முன்கூட்டியே தேர்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

முன்னதாக ஆந்திராவுக்கு குண்டூர் – விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதன்படி, அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு, அங்கேயே சில சட்டசபை கூட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags: visakapatinamjagan mohan reddy
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சர்ச்சைப் பேச்சு!

Next Post

கேங்மேன் பணிக்கு 5,336 தேர்வாளர்களுக்குப் பணி வழங்காமல் வஞ்சிக்கிறது திமுக அரசு- அண்ணாமலை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies