ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான்- அமித்ஷா!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான்- அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நாட்டை நடத்துவது அரசாங்கம்தான், செயலாளர்கள் அல்ல என்பது ராகுல் காந்திக்கு யார் புரிய வைப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எனது சகாக்களில் ஒருவர்  நாட்டை நடத்துபவர்களின் எண்ணிக்கையில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டை நடத்துவது அரசாங்கம்தானை தவிர, செயலாளர்கள் அல்ல என்பதை அவருக்கு (ராகுல் காந்திக்கு) யார் புரிய வைப்பார்கள். மேலும், ஓ.பி.சி.க்களுக்காகப் பேசுவதாகக் கூறுபவர்கள், ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் கொள்கையை அமைச்சரவையும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யும் என்று நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.  எங்கள் கட்சியில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு ஒப்பீடு செய்ய விரும்பினால், எங்களிடம் வாருங்கள்.

எங்கள் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 அமைச்சர்கள் உள்ளனர். 1,358 சட்டமன்ற உறுப்பினர்களில் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த 365 பேர் எங்கள் கட்சியில் உள்ளனர். ஓ.பி.சி. பிரிவினரின் நலன் குறித்து தொடர்ந்து பேசுபவர்களின் எண்ணிக்கையில் இது அதிகம். நீங்கள் ஓ.பி.சி. பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்த நாட்டிற்கு ஓ.பி.சி. சமூகத்தில் இருந்து பிரதமரை வழங்கியது பா.ஜ.க.தான்.

தேர்தலுக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் விரைவில் நடத்தப்படும். அதன் பிறகு பெண்கள் நாடாளுமன்றத்தில் அதிக குரல் கொடுப்பார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவருவதற்கான 5-வது முயற்சி இது. தேவகவுடா முதல் மன்மோகன் சிங் வரை இந்த மசோதாவைக் கொண்டு வர 4 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் இந்த மசோதா நிறைவேற்றப்படாததற்கு என்ன காரணம்?

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் சமமான பங்கேற்பு ஆகியவை அரசாங்கத்தின் உயிர் சக்தியாக உள்ளது. இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள், மகிளா சம்மன் சேமிப்பு திட்டம், மகப்பேறு விடுப்பு மற்றும் பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், ஒரு பெண் குழந்தைக்கு கல்வி கொடுங்கள் எனப் பெண்களுக்கு அதிகாரம் அளித்த முயற்சிகள் ஒருபுறம் . அதேசமயம், இந்த நாட்டில் 5 தசாப்தங்களுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், 11 கோடி குடும்பங்கள் கழிப்பறை இல்லாதவர்களாக இருந்தனர்.

அவர்களால் ‘கரீபி ஹடாவோ’ கோஷம் போட்டாலும், ஏழைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்ய முடியவில்லை. ஒரு வீட்டில் கழிப்பறை இல்லாதபோது, ​​அதிகம் பாதிக்கப்படுவது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள்தான். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாட்டில் முடிவெடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். நாம் இதற்கு முன்பு 4 முறை பெண்களை ஏமாற்றி இருக்கிறோம். ஆகுவே, தற்போது நாம் அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும். இந்த புதிய தொடக்கத்தில் நாம் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்துடன் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

Tags: ParliamentSpeechAmit sha
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 9-ந்தேதி தமிழக சட்டசபை கூடுகிறது!

Next Post

புதிய பணிகளைத் தொடங்கவுள்ள விக்ரம் லேண்டர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies