ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான்- அமித்ஷா!
Jul 29, 2026, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான்- அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 20, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நாட்டை நடத்துவது அரசாங்கம்தான், செயலாளர்கள் அல்ல என்பது ராகுல் காந்திக்கு யார் புரிய வைப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எனது சகாக்களில் ஒருவர்  நாட்டை நடத்துபவர்களின் எண்ணிக்கையில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டை நடத்துவது அரசாங்கம்தானை தவிர, செயலாளர்கள் அல்ல என்பதை அவருக்கு (ராகுல் காந்திக்கு) யார் புரிய வைப்பார்கள். மேலும், ஓ.பி.சி.க்களுக்காகப் பேசுவதாகக் கூறுபவர்கள், ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் கொள்கையை அமைச்சரவையும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யும் என்று நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.  எங்கள் கட்சியில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு ஒப்பீடு செய்ய விரும்பினால், எங்களிடம் வாருங்கள்.

எங்கள் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 அமைச்சர்கள் உள்ளனர். 1,358 சட்டமன்ற உறுப்பினர்களில் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த 365 பேர் எங்கள் கட்சியில் உள்ளனர். ஓ.பி.சி. பிரிவினரின் நலன் குறித்து தொடர்ந்து பேசுபவர்களின் எண்ணிக்கையில் இது அதிகம். நீங்கள் ஓ.பி.சி. பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்த நாட்டிற்கு ஓ.பி.சி. சமூகத்தில் இருந்து பிரதமரை வழங்கியது பா.ஜ.க.தான்.

தேர்தலுக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் விரைவில் நடத்தப்படும். அதன் பிறகு பெண்கள் நாடாளுமன்றத்தில் அதிக குரல் கொடுப்பார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவருவதற்கான 5-வது முயற்சி இது. தேவகவுடா முதல் மன்மோகன் சிங் வரை இந்த மசோதாவைக் கொண்டு வர 4 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் இந்த மசோதா நிறைவேற்றப்படாததற்கு என்ன காரணம்?

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் சமமான பங்கேற்பு ஆகியவை அரசாங்கத்தின் உயிர் சக்தியாக உள்ளது. இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள், மகிளா சம்மன் சேமிப்பு திட்டம், மகப்பேறு விடுப்பு மற்றும் பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், ஒரு பெண் குழந்தைக்கு கல்வி கொடுங்கள் எனப் பெண்களுக்கு அதிகாரம் அளித்த முயற்சிகள் ஒருபுறம் . அதேசமயம், இந்த நாட்டில் 5 தசாப்தங்களுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், 11 கோடி குடும்பங்கள் கழிப்பறை இல்லாதவர்களாக இருந்தனர்.

அவர்களால் ‘கரீபி ஹடாவோ’ கோஷம் போட்டாலும், ஏழைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்ய முடியவில்லை. ஒரு வீட்டில் கழிப்பறை இல்லாதபோது, ​​அதிகம் பாதிக்கப்படுவது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள்தான். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாட்டில் முடிவெடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். நாம் இதற்கு முன்பு 4 முறை பெண்களை ஏமாற்றி இருக்கிறோம். ஆகுவே, தற்போது நாம் அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும். இந்த புதிய தொடக்கத்தில் நாம் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்துடன் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

Tags: ParliamentSpeechAmit sha
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 9-ந்தேதி தமிழக சட்டசபை கூடுகிறது!

Next Post

புதிய பணிகளைத் தொடங்கவுள்ள விக்ரம் லேண்டர்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies