ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீசிய சம்பவத்தில், இரண்டு சிறார்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து டெல்லி நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்தார். ஃபிரோசாபாத் நகர் அருகே, ரயிலை நோக்கி சமூக விரோதிகள் கற்களை வீசி எறிந்தனர்.
இதில் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. கல்வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், மோகன் பாகவத் முழு பாதுகாப்புடன் இருப்பதாகவும், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு ரயில்வே வாரியம் உடனடியாக தகவல் அனுப்பியது. இதனிடையே, ரயில் மீது கல்வீசியதாக இரண்டு சிறார்களைப் பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
















