நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியின்போது வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறி, CJP அமைப்பினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நாட்களாக அமைதியான முறையில் நடந்த போராட்டம், கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, காவலர்களை தாக்கி, வாகனங்களைச் சேதப்படுத்திய குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 2 ஆயிரத்து 873 குற்றவாளிகளை போலீசார் எவ்வாறு விசாரித்தனர் என்பதை மாநில அரசிடம் காவல் ஆணையர் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அதில், 989 பேர் மீது கொடூரமான குற்ற பின்னணி இருப்பது கண்டறியப்பட்டது.
101 பேர் கொலை வழக்கிலும், 284 பேர் ஆயுதச்சட்ட வழக்கிலும், 61 பேர் போதை மருந்து கடத்தல் வழக்கிலும் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உட்பட பிற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் வன்முறையில் ஈடுபட்டிருந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
















