ஆரோவில் சர்வதேச மையத்தில் நடந்த கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரியின் ஆரோவில் சர்வதேச மையம் மற்றும் தாய்லாந்து இடையேயான நீண்டகால நட்புறவைக் கொண்டாடும் வகையில் கலாச்சார பரிமாற்றம் விழா கொண்டாடப்பட்டது.
ராயல் தாய் தூதரகம் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வருகை தந்த தாய்லாந்து தூதரக அதிகாரிகளை அறக்கட்டளை நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகம், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி ஆகியோரின் ஏற்பாட்டின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில், பாரம்பரியத்தை கௌரவித்தல், அன்பும் விருந்தோம்பலும் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், ஆரோவில் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு இடையிலான ஆழமான உறவின் கூட்டு முயற்சிகள், இளைஞர் மேம்பாடு மற்றும் ஆன்மிக நல்லிணக்கத்தின் சக்திக்கு ஆரோவில் ஒரு சான்றாக உள்ளதாக அறக்கட்டகளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
















