இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் பயணித்த இந்திய கப்பல்கள் மீது சமீபத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் இந்தியர்கள் உட்பட பல மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்,
உண்மையை திரித்து வெளியிடும் ஈரானின் நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாகவும், நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனப்பான்மை அந்த நாட்டிடம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேறிய இந்தியக் கப்பல்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் டிரோன் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது நடவடிக்கைகளை உடனடியாக சீர்செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















