வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை நீட் மறுதேர்வுக்கு 15 நிமிடங்களை கூடுதலாக ஒதுக்கீடு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடந்த இளநிலை நீட் தேர்வு, முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. வரும் 21-ம் தேதி இளநிலை நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு 15 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பகல் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை தேர்வு நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நிர்வாக நடைமுறைகளால் தேர்வெழுதுவதற்கான நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருதியதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் வினாத்தாள் புத்தகத்தில் rough work எனப்படும் தோராயக் கணக்கீடு செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















