மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 10-வது மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் டேனி வயட் சதம் விளாசி, 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து 220 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் கெம்ப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
















