மீண்டும் அதிர்ச்சி: தர்மபுரி பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார்!
Jul 26, 2025, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீண்டும் அதிர்ச்சி: தர்மபுரி பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார்!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில், மர்ம நபர்கள் மலம் கலந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில், பனைக்குளம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், தண்ணீர் குடிக்கப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டி அருகே சென்றுள்ளனர். அப்போது, குடிநீர்த் தொட்டியில் இருந்து கடுமையாகத் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால், அந்த நீரைக் குடிக்காமல் வந்த மாணவர்கள், இது குறித்து தங்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் இணைந்து சென்று, சம்பந்தப்பட்ட குடிநீர்த் தொட்டியை நேரில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த நீரில் கடும் துர்நாற்றம் வீசியதும், அதில் மர்ம நபர்கள் மலம் கலந்து இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பராப்பட்டி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும், குற்றவாளிகள் அந்த பகுதியில் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்களா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வி அலுவலர் துளசிராமனும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் காவல்துறை தடுமாறி வருவதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: darmapuri
ShareTweetSendShare
Previous Post

13 மாவட்டங்களில் கனமழை !

Next Post

எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும் – அண்ணாமலை பேச்சு!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies