மீண்டும் அதிர்ச்சி: தர்மபுரி பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார்!
Oct 26, 2025, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் அதிர்ச்சி: தர்மபுரி பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார்!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில், மர்ம நபர்கள் மலம் கலந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில், பனைக்குளம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், தண்ணீர் குடிக்கப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டி அருகே சென்றுள்ளனர். அப்போது, குடிநீர்த் தொட்டியில் இருந்து கடுமையாகத் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால், அந்த நீரைக் குடிக்காமல் வந்த மாணவர்கள், இது குறித்து தங்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் இணைந்து சென்று, சம்பந்தப்பட்ட குடிநீர்த் தொட்டியை நேரில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த நீரில் கடும் துர்நாற்றம் வீசியதும், அதில் மர்ம நபர்கள் மலம் கலந்து இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பராப்பட்டி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும், குற்றவாளிகள் அந்த பகுதியில் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்களா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வி அலுவலர் துளசிராமனும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் காவல்துறை தடுமாறி வருவதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: darmapuri
ShareTweetSendShare
Previous Post

13 மாவட்டங்களில் கனமழை !

Next Post

எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும் – அண்ணாமலை பேச்சு!

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies