மீண்டும் அதிர்ச்சி: தர்மபுரி பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார்!
Jul 29, 2026, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீண்டும் அதிர்ச்சி: தர்மபுரி பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார்!

Murugesan M by Murugesan M
Sep 21, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில், மர்ம நபர்கள் மலம் கலந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில், பனைக்குளம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், தண்ணீர் குடிக்கப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டி அருகே சென்றுள்ளனர். அப்போது, குடிநீர்த் தொட்டியில் இருந்து கடுமையாகத் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால், அந்த நீரைக் குடிக்காமல் வந்த மாணவர்கள், இது குறித்து தங்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் இணைந்து சென்று, சம்பந்தப்பட்ட குடிநீர்த் தொட்டியை நேரில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த நீரில் கடும் துர்நாற்றம் வீசியதும், அதில் மர்ம நபர்கள் மலம் கலந்து இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பராப்பட்டி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும், குற்றவாளிகள் அந்த பகுதியில் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்களா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வி அலுவலர் துளசிராமனும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் காவல்துறை தடுமாறி வருவதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: darmapuri
ShareTweetSendShare
Previous Post

13 மாவட்டங்களில் கனமழை !

Next Post

எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும் – அண்ணாமலை பேச்சு!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies