பிரதமர் மோடி செப்டம்பர் 23-ம் தேதி வாரணாசி செல்கிறார்!
Jun 6, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி செப்டம்பர் 23-ம் தேதி வாரணாசி செல்கிறார்!

Web Desk by Web Desk
Sep 21, 2023, 09:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேசம் முழுவதும் சுமார் ரூ. 1115 கோடி செலவில் கட்டப்பட்ட 16 அடல் உண்டு உறைவிட வித்யாலயா பள்ளிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 23 அன்று வாரணாசி செல்கிறார். அங்கு பிற்பகல் 1.30 மணியளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3:15 மணியளவில், ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை அடையும் பிரதமர், காசி சங்க கலாச்சார பெருவிழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 16 அடல் உண்டு உறைவிட பள்ளிகளையும்  அவர் திறந்து வைக்கிறார்.

வாரணாசியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் நவீன உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு படியாகும்.

வாரணாசி, ராஜதலாப், கஞ்சரியில் கட்டப்படவுள்ள நவீன சர்வதேச கிரிக்கெட் மைதானம், சுமார் 450 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் உருவாக்கப்படும்.

இந்த அரங்கத்தின் கருப்பொருள் கட்டிடக்கலை சிவபெருமானிடமிருந்து உத்வேகம் பெறுகிறது, பிறை வடிவ கூரை உறைகள், திரிசூல வடிவ இரவு விளக்குகள், படித்துறை படிகள் அடிப்படையிலான இருக்கைகள், பில்விபத்ரா வடிவ உலோக தாள்கள் முகப்பில் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்புகள் உள்ளன. இந்த மைதானத்தில் 30,000 பார்வையாளர்கள் அமரலாம்.

அடல் உண்டு உறைவிட வித்யாலயா பள்ளிகள் 

தரமான கல்விக்கான அணுகலை மேலும் அதிகரிக்கும் நோக்கில், உத்தரப்பிரதேசம் முழுவதும் சுமார் 1115 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பதினாறு அடல் உண்டு உறைவிட வித்யாலயா பள்ளிகள், தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள், கொவிட் -19 தொற்றுநோய்  பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆகியோருக்காக பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியும், 10 – 15 ஏக்கர் பரப்பளவில், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம்,  பொழுதுபோக்கு பகுதிகள், சிறிய அரங்கம், விடுதி வளாகம், உணவகம் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகளுடன் கட்டப்படுகிறது. இந்த உறைவிடப் பள்ளிகளில் தலா 1000 மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காசியின் கலாச்சார உயிரோட்டத்தை வலுப்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வை காசி சங்க கலாச்சார பெருவிழாவின் கருத்தாக்கத்திற்கு வழிவகுத்தது. பெருவிழாவில், 17 பிரிவுகளில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பாட்டு, வாத்திய இசை, தெருமுனை நாடகம், நடனம் போன்றவற்றில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திறமையான பங்கேற்பாளர்கள் தங்கள் கலாச்சார திறன்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள்.

Tags: pm modi latest newsPM Modi
ShareTweetSendShare
Previous Post

காதலிக்க மறுத்த மாணவிக்குக் கத்திக்குத்து – சென்னையில் பயங்கரம்!

Next Post

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான புதிய ‘ஜெர்சி’ வெளியானது.

Related News

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies