எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும் - அண்ணாமலை பேச்சு!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும் – அண்ணாமலை பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 21, 2023, 09:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சட்டசபையில் 14 சதவீதமும், நாடாளுமன்றத்தில் 15 சதவீதமும் பெண்கள் உள்ளனர். ஆனால், தமிழக சட்டசபையில் 5 அரை சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர்.

இதனால், பெண்களின் நலனை பேணி காக்கும் வகையிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போராட்டம் காரணமாக பாஜக இதை செய்து காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் அதாவது 1967 மற்றும் 1976 மக்களவை தேர்தலின் போது அதற்கு முந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படியாக வைத்துத்தான் தொகுதிகள் அதிகரிப்பு செய்யப்பட்டன.

சுமார் 50 ஆண்டுகளாகத் தொகுதி மறு வரையறையே செய்யவில்லை. எனவே, இதை இப்போது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதி மறுவரை செய்யப்பட உள்ளது. இதில் சதி எங்கே இருக்கிறது சதி எப்படி வந்தது.

அதிமுக – பாஜக இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. பிரதமராக மோடிதான் மீண்டும் வரவேண்டும் என்று பாஜக மற்றும் அதிமுக உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.

எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கு எல்லாம் பதிலடி கொடுத்தால் சரியாக இருக்காது.

அண்ணாதுரை குறித்து நான் கூறிய கருத்து சரியானது. அதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. எனது கருத்தில் தான் எப்போதும் பின்வாங்க மாட்டேன். வரலாற்றில் உள்ளதைத்தான் நான் சொன்னேன். அவரைப் பற்றி தவறாகவோ அல்லது தரக்குறைவாகவோ எதுவும் பேசவில்லை.

அதிமுக என்ற கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது.அதுபோல பாஜக என்ற கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அவர்கள் அவர்கள் கொள்கையின்படி நடக்கிறார்கள். நாங்கள் எங்கள் கொள்கையின்படி நடக்கிறோம்.

அந்த வகையில் சனாதனம் என்பது என் உயிர் நாடி. அதற்காக அவர்களும் சனாதனம் பற்றிப் பேசவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் முடியாது என்றார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் அதிர்ச்சி: தர்மபுரி பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார்!

Next Post

காதலிக்க மறுத்த மாணவிக்குக் கத்திக்குத்து – சென்னையில் பயங்கரம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies