இந்தியாவின் மகள்களைக் கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம்: பிரதமர் நரேந்திர மோடி!
Aug 15, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் மகள்களைக் கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம்: பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Sep 22, 2023, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‛‛பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து புதிடெல்லி உள்ள பா.ஜக, தலைமை அலுவலகத்தில், நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் பாராட்டுகிறேன். நேற்றும், அதற்கு முந்தைய நாளும், நாம் புதிய வரலாற்றை படைத்துள்ளோம். இந்த சாதனையை படைக்க கோடிக்கணக்கான மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தது பெருமை அளிக்கிறது.

இந்த தருணம் வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளப்படும். மசோதா பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது பெருமை அளிக்கிறது. ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. பெரும்பான்மை பலத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம். இந்தியாவின் எதிர்காலத்திற்கு புதிய சகாப்தம் படைக்கப்பட்டு உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சாதாரண மசோதா அல்ல. புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டிற்கான அறிவிப்பு. மசோதா நிறைவேற்றப்பட்டது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு நான் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றியதற்கான சான்று.

இந்தச் சட்டத்தின் மூலம், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய கடந்த 3 தசாப்தங்களாக பாஜ., அனைத்து முயற்சிகளை மேற்கொண்டது. இது எங்களது உறுதிமொழி. இன்று அதை நிறைவேற்றி உள்ளது.

சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன. அத்தகைய ஒரு முடிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை உடைக்க முயற்சி செய்கிறோம்.

பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, செழிப்பு ஆகியவற்றுக்கான திட்டங்களைக் கொண்டு அவர்களை முன்னேற்ற பா.ஜ.க., அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் மகள்களை கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம். பெண்களை கைதூக்கிவிட முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 9 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனர்.

மக்கள் முழுப் பெரும்பான்மையுடன் நிலையான வலிமையான அரசைத் தேர்வு செய்ததால் தான், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் சாத்தியமானது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல பெரும்பான்மையுடன் கூடிய உறுதியான அரசு தேவை என்பதை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிரூபிக்கிறது.

யாருடைய அரசியல் சுயநலன்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்க விட மாட்டோம். இதற்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் விவாதத்திற்கு வந்த போது, அதனை நிறைவேற்ற எந்த முயற்சியும் அளிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக நாடு காத்திருந்தது;

அந்த மசோதாவை பார்லியின் இரு அவையிலும் நிறைவேற்றியதன் மூலம் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை செய்து காட்டி விட்டோம், எனத் தெரிவித்தார்.

 

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஜகவில் இணைந்தார்!

Next Post

சக்தி-க்கே “சக்தி” கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி !

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies