5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Jul 23, 2025, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Web Desk by Web Desk
Sep 23, 2023, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணியில், இரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருந்தனர்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுசேன், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா ஆகியோர் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஸ் களமிறங்கினர். மிட்செல் மார்ஸ் முதல் ஓவரிலேயே முகமது ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர். இதனைத்தொடர்ந்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணி 277 ரன்களைக் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஜோடி அதிரடியாக ஆடினர். இருவரும் முறையே, 77 பந்துகளில் 71 ரன்களையும், 63 பந்துகளில் 74 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய கே.எல். ராகுல் நிதானமாக ஆடி 58 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் 281 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 24-ந் தேதி இந்தூரில் 2-வது போட்டியும், 27-ந் தேதி ராஜ்கோட்டில் 3-வது போட்டியும் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags: Cricketindia vs Australiamatch
ShareTweetSendShare
Previous Post

வெட்டி வீழ்த்தப்பட்ட கோவில் மரம் – பக்தர்கள் போராட்டம்

Next Post

மணல் திருட்டைத் தடுக்கும் அதிகாரிகளுக்குக் திமுக கொலை மிரட்டல்- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More

அண்மைச் செய்திகள்

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies