ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக தரையிறங்கபட்டது. சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிடப்பட்டது. சந்திரயான் 3 யில் இருந்த பிரக்யான் ரோவர், நிலவில் ஆய்வு செய்து கந்தகம் இருப்பதை உறுதிசெய்தது. இந்நிலையில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2 ஆம் தேதி உறக்க நிலைக்கு சென்றது.
நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க இஸ்ரோ சில வசதிகளை செய்துள்ளது. கடந்த 21 ஆம் தேதியுடன் நிலவில் இரவு காலம் முடிவடைந்தது, பகல் நேரம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி விக்ரம் லேன்டரை எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.
Chandrayaan-3 Mission:
Efforts have been made to establish communication with the Vikram lander and Pragyan rover to ascertain their wake-up condition.As of now, no signals have been received from them.
Efforts to establish contact will continue.
— ISRO (@isro) September 22, 2023
ஆனால் லேண்டரையும், ரோவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுக்குறித்து இஸ்ரோ தனது X வலைத்தளத்தில், “விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இதுவரை அவைகளிடமிருந்து எந்த சிக்னலும் வரவில்லை என்றும் அறிவித்துள்ளது.
மேலும் விக்ரம் லேண்டருடனும், பிரக்யான் ரோவருடனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் தொடரும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.