கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்தனர் !
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்தனர் !

தமிழக சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

இந்த நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் வாலிபர்கள் பாட சாலைகளில் சுதேச மகான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்க்கிறார்கள். முக்கியமாக, கிருஸ்துவ பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவேயில்லை.

வியாசர், யக்ஞவல்க்யர், ஆதிசங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப்பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரீகம் தெரியாதவர்கள் என்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள்.

தந்தி, மோட்டார் வண்டி முதலிய விஷயங்களைப் பற்றி கேள்விப்பட்டிராததனால் கம்பன் தெய்வீகமான கவியென்பது பொய்யாய் விடுமா? ஒரு கிருஸ்துவ பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக்கொண்டிருந்த போது, உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாசனுக்குத் தெரியாதே, உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரீக ஜனங்கள் என்று கூறினார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் இடத்தை தீமை உண்டாக மாட்டாது?

நமது முதலாவது கடமை யாதென்றால், நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மகாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்குத் தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும்.

சிவாஜியைப்பற்றி சின்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப்பற்றி பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்” என்று 116 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் எழுதியுள்ள கட்டுரையே இது.

நான்கு சதவீதம் நம் நாட்டில் இருப்பது கிறிஸ்துவர்கள் தான் என்பது அப்பாவுக்குத் தெரியுமா? 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு சர்ச்சைகள் இருந்தனவா?

அப்பாவு அவர்களே, அந்த 4 சதவீதம் தான் நம் அறிவார்ந்த சமுதாயத்தை நாசமாக்கியது என்று பாரதியின் வாக்கு சொல்கிறதென்றால் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் சொன்ன அந்த 4 சதவீத அருட்சகோதரர்கள், கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்து, தங்களின் மதத்தைத் திணித்தார்கள் என்பதையும், மதமாற்றத்திற்கு வழி வகுத்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா அப்பாவு அவர்களே? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjp tamilnadunarayanan tiruppathi
ShareTweetSendShare
Previous Post

பிரக்யான் ரோவர் எப்போது கண் விழிக்கும்?

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies