இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!
Jul 25, 2025, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!

பிரதமர் மோடிக்கும் வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமை நீடித்த புகழை பெற்றிருக்கும் என்று மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மணீஷ் கோபின் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78-வது அமர்வு 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பொது விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், “உலகளாவிய தெற்குக்கான இந்தியா- ஐ.நா: வளர்ச்சிக்கான டெலிவரிங்” என்கிற நிகழ்வில் உரையாற்றிய மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில்துறை அமைச்சர் மணீஷ் கோபின், “டெல்லியில் ஒரு மறக்க முடியாத மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு வாழ்த்துகள்.

டெல்லி பிரகடனத்தின் அனைத்து பாராக்களும் சீனா, ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் 100 சதவிகித ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகள், பொது நலனுக்கான வேறுபாடுகளை சமாளிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜி20 மாநாட்டில் மொரீஷியஸ் நாட்டையும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பெருமையாக இருந்தது.  மேலும், இம்மாநாடு ஒரு தெற்கின் குரலாக ஒலிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவி வரலாற்றில் இடம்பிடிக்கும். சர்வதேச சமூகத்திற்குள் வேறுபாடுகள் பெருகிவரும் நிலையில், ​​நிலையான மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான மாநாடாக ஜி20 அமைந்தது. அதேபோல, ஜி20-ன் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியனைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. பன்முகத்தன்மையை முன்னேற்றுவதற்கும், உலகளாவிய தெற்கில் செழிப்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியாவின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்றார்.

எனது சொந்த நாட்டைப் பொறுத்தவரை, நரேந்திர மோடியால் சூப்பர் ஸ்பெஷல் என்று தகுதி பெற்ற இந்தியாவுடனான நமது நீண்டகால உறவு, பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று உறவுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. மொரீஷியஸ் மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பு முதலீட்டு உள்கட்டமைப்பு, வர்த்தகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைகிறது” என்று கூறினார்.

Tags: Praisedmauritiusindia g20 summitMinister
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் கலாசாரத்தை உலகமே கொண்டாடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

கோப்பையை வெல்வது பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies